Saturday, January 5, 2013

ஓர் இரவில் - கிறுக்கல்

ஓர் இரவில் துயிலை மெல்ல 
தொலைத்தெழுந்து செய்வதறியாது 
வான் நோக்கினேன் 

சிறு சத்தத்துடன் மின் விசிறி சுழன்று 
கொண்டிருந்தது கண்மூடி 
மீண்டும் உறங்க எத்தனித்தேன் 
ஆனால் ஏனோ அது முடியவில்லை

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு 
கடிகாரத்தை உற்று நோக்கினேன் 
அது நடுநிசி என்றே காட்டியது 

சலனம் இல்லாது  மீண்டும் படுக்கையின் 
மீது விழுந்தேன் என்ன செய்வதென்று 
புரியாது 

அருகாமையில் இருந்த புத்தகத்தை எடுத்து புரட்ட  
துவங்கினேன் மனம் ஏனோ அதில் லைக்கவில்லை 

மெல்ல கண்மூடி அன்றைய தினத்தில் 
நான் எத்தனை முறை பொய்கள் கூறி இருக்கிறேன் 
என்று எண்ணி பார்க்க துவங்கினேன் 

காலையில் அம்மாவிடம் நன்றாக உறங்கினேன் 
என்பதில் இருந்து துவங்குகிறது அந்த பட்டியல் 

இரவில் படுக்க செல்லும் முன் அவளின் பிடியில் 
இருந்து தப்பிக்க தூக்கம் வருகிறது என்பது வரை 
இருபது பொய்கள்

அன்றாட வாழ்வில் ஒரு நாளைக்கு இருபது,
இதற்க்கு நடுவில் எத்தனை பொய்களை மறுத்தேன் 
என்பது எனக்கு நினைவில்லை 

நாளையில் இருந்து பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள 
வேண்டும்., ஹ்ம்ம் குறைத்து கொள்ள வேண்டும் என்று 
நினைத்து உறுதி எடுத்து கொண்டேன் 

பொய்மையை பற்றிய இந்த ஆழந்த சிந்தனையின் 
நடுவில் எப்போது மெய் மறந்து உறங்கினேன் 
என்பது எனக்கு நினைவில்லை 

மெல்ல கதிரவன் என் வீடு சன்னலின் வழியே 
ஊடுருவி என் முகத்தின் மேல் விழுந்தது, எழுந்தது 
கதிரவன் செயல் மட்டும் அல்ல, 
கைபேசியின் அழைப்பு மணியினாலும் கூட 

ராத்திரியில் என் என்னுடன் பேசவில்லை 
என்று என்னவள் கேள்விகனைகளை எழுப்ப 

நேற்று அசதியினால் கண்  விழிக்க முடியவில்லை என்று 
என்னையும் அறியாமலே மீண்டும் எனது அன்றைய 
பட்டியலை துவங்கினேன்"

Thursday, October 11, 2012

எப்போது நீ கவிஞன் ஆனாய்? -


என்னுடைய கிறுக்கல்களை பார்த்து
என்னவள் வினாவினாள்
எப்போது நீ கவிஞன் ஆனாய் என்று?

அவளிடம் கூறினேன்,
உன்னைப் போன்ற தேவதையுடன்
காதல் கொண்ட பொழுதில் இருந்து!..

Tuesday, October 9, 2012

கடல் கடந்து..






இடம் பெயர்ந்து 
இன்ப துன்பங்களை மறந்து 
உற்றார், உறவினர், நண்பர்களை பிரிந்து 
கடல்களை கடந்து வந்திருக்கும் 
என்னைப் போன்றோர்க்கு 
எத்தனை கோடி ஊதியம் கொடுத்தாலும்
தாயின் மடிக்கும்,
தந்தையின் அதட்டலுக்கும்,
சகோதரியின் பாசத்திற்கும்,
ஏங்கித் தானே கிடக்கும் இந்த மனசு?



அந்நிய மண்ணில் கால் எடுத்து வைத்த முதல் நாள்,
எழுதிய வரிகள்...

Tuesday, October 2, 2012

யானை பசி






கடை தெருவிற்கு சென்று காய்கறிகளை
வாங்க சென்றேன்

மீதி சில்லறை 5 ரூபாய்க்கு பதிலாக
சிறிய இனிப்பு பொட்டலத்தை கொடுத்தான்
அந்த கடைக்காரன்

அதை வாங்கி கொள்ள மனம்
வராததால் மீதி சில்லரையினை கேட்டு
சண்டை போட்டேன்

போகட்டும் 5 ரூபாய் தானே
என்றது மனது , ஆனால் மறுபுறமோ
கேளு இது உனது உரிமை என்றது

ஒரு வழியாக மீதி சரியான சில்லறையை
வாங்கிகொண்டு நடந்தேன்,

வரும் வழியில் ஒரு பிச்சைகாரன் கையை
நீட்டி உதவி கேட்டுகொண்டிருந்தார்

முகத்தை பார்க்கவும் மிகுந்த வறுமையும், பசியும் 
இருப்பது கண்களில் தெரிந்தது

பாக்கெட்டினுள்  கையை நுழைத்தேன்
5 ரூபாய் வந்தது, ஹ்ம்ம்  கடைக்காரனிடம்

சண்டை போட்டு வாங்கிய அதே 5 ரூபாய் தான்

அந்த ரூபாயினை கொடுத்து விட்டு சிறிது தூரம்
நடந்து சென்று பின்னல் திரும்பி பார்த்தேன்

அந்த பிச்சைக்காரர் அருகினில் இருந்த
தேனீர் விடுதியினில் ஒரு தேனீரினை
பருகி கொண்டிருந்தார்

ஏதோ என்னால் முடிந்த அளவு அவரின் பசியினை
தீர்க்க முடியாவிட்டாலும், யானை பசிக்கு
சோளைபோரியை...


Tuesday, May 29, 2012

அக்கணம் என்ன செய்வேன்? - சிறுகதை




ராமையா அந்த கடைசி டேபிளை கவனி என்ற முதலாளியின் குரலுக்கு கட்டுப்பட்டு அந்த டேபிளை நோக்கி நகர்ந்தார் ராமையா

15 வருடங்களாக அதே ஹோடேலில் வேலை பார்ப்பவர்,ஹோட்டலின் தரம் உயர்ந்ததே தவிர இந்த மனிதனின் வழக்கை தரம் உயரவில்லை

தங்களது வியர்வைத் துளிகளை பணமாக மாற்றி முதலாளியின் கஜானாவை நிரப்பும் மனிதர்களில் இவரும் ஒருவர்

இட்லி, பொங்கல், வடை, ஊத்தாப்பம், தோசை, ரவை தோசை என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் தான் 15 வருடங்கள் ஓதிய மந்திரத்தினை கடகடவென சொல்ல ஆரம்பித்துவிடுவார்

ராமையாவும் சாதாரண ஆள் இல்லை, சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் சென்றாலும் இவர் மன்னித்துவிடுவார், ஆனால் டிப்ஸ் வைக்காமல் சென்றால் அவ்வளவுதான் சிறந்த கேட்ட வார்த்தைகள் பத்தினை தெரிவு செய்து மனதிற்குள்ளே அர்ச்சிக்க ஆரம்பித்துவிடுவர் அவ்வளவு நல்ல குணம் அவருக்கு

கடைசி டேபிளில் உள்ளவர் இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர் என்பதால் ராமையா விழுந்து விழுந்து கவனிப்பார் அதுமட்டுமில்லாது அவர் நிறைய டிப்ஸ் வைப்பார் என்பதும் மற்றொரு காரணம்


வேலையினை முடித்து விட்டு வழக்கம் போல ராமையா தனது டி.வீ.எஸ் வண்டியினை எடுத்து கொண்டு கிளம்பினர் 

வீட்டிற்க்கு சென்றதும் கை கால்களை கழுவி விட்டு டி.வீ யை போட்டு விட்டு அதன் முன்னே அமர்ந்தார்

" தெய்வானை தெய்வானை"

" வரேங்க, அடுப்படில இருக்கேன் கொஞ்சம் பொறுங்க"
அடுப்படியை விட்டு வெளியில் வந்தாள் தெய்வானை

" என்னங்க?"

" பசங்க தூங்கிடாங்களா?"

" இவ்வளோ நேரம் முழிச்சிருந்து இப்போ தன தூங்கினாங்க"

" ம்ம்ம், பெரியவளுக்கு உடம்பு எப்படி இருக்கு?"

" இன்னைக்கு கொஞ்சம் தாவல"

" அவளோட மருந்து அடுத்த வரம் தீர்ந்து போய்டும், மறந்திடாம நாளைக்கு வாங்கிட்டு வாங்க?"

" ம்ம்ம், வாங்கிட்டு வரேன்"

" அப்புறம் சின்னவனுக்கு ஏதோ எக்ஸாம் பீஸ் கட்டணும்னு சொன்னங்க"

" எவ்வளுவு ரூபாய்?"

"1800"
இந்த செலவுகள் அனைத்தையும் தனது குறிப்பேட்டில் குறித்து வைத்து கொண்டார் ராமையா ஏனெனில் அடுத்த வாரம் அவர் வீட்டு மாத பட்ஜெட்டில் இவை முக்கிய அங்கங்களாக இருக்கும்

ராமையா படிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார், தான் படிக்காத காரணத்தில் தான் அஞ்சுக்கும், பத்துக்கும் அடுத்தவங்க கைய எதிர் பார்க்க வேண்டிருக்கு அதனால் தான் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பது ராமையாவின் ஆசை மட்டும் மல்ல, தெய்வானையின் 
கனவும் கூட அதனால் தான் அவர் தன்னுடைய தகுதிக்கு மீறிய பெரிய பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டிருக்கிறார் 

சம்பள நாளை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர் தத்தம் தேவைகளை பூர்த்தி செய்ய

சம்பள நாள் அன்று ஹோடெல்லில் வேலை பார்க்கும் அனைவரின் முகத்தில் ஒரு அதிகமான பிரகாசம் ஒன்று இருக்கும் 
அன்று வழக்கத்தினை விட அனைவரும் சீக்கிரமே வேலைக்கு வந்து விடுவார்கள், அதே போல் வேலையும் வேகமாக நடக்கும்
இது அனைத்து இடங்களிலும் நடக்கும் பொதுவான ஒன்றே

அந்த நாளில் யாரேனும் டிப்ஸ் வைக்க விட்டாலும் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவர், மொத்தத்தில் அன்று அந்த ஹோடெல்லில் ராமையா யாருக்கு சப்ளை செய்தாலும் அவர்கள் கண்ணனுக்கு ராமையா ஒரு நல்ல மனிதனாகவே தெரிவார் 
ராமையா சம்பளம் வாங்கியவுடன் வாய் நிறைய புன்னகையோடு தனது வண்டியை கிளப்பினார் 

தலைவியை விட்டு சென்று போருக்கு சென்ற தலைவனின் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் தலைவியை போல தெய்வானை வீட்டின் வாயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள், அவ்வபோது ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்யப்பட்ட இந்த மாத பட்ஜெட்டினை ஒரு முறைக்கு, இரு முறை சரி பார்த்து கொண்டிருந்தாள் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்று 

ராமையா வழியில் தான் குழந்தைகளுக்கு பிடித்த பலகாரங்களை வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார், தான் வழக்கமாக செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஆதலால் தனது பணத்திற்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய அவர் அந்த வழியில் செல்லாமல் மாற்று வழியில் சென்றார்

அவர் இப்போது சென்று கொண்டிருக்கும் பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அது தனக்கும் தனது பணத்திற்கும் பாதுகாப்பு என்று கருதினர் 

அவர் அந்த சாலையினை கடந்து கொண்டிருக்கும் போது, சாலையும் ஓரத்தில் ஒருவர் லிப்ட் வேண்டும் என்பது போல சமிக்கை செய்து கொண்டிருந்தார் மனமோ அவருக்கு இடம் கொடு என்றது, ஆனால் மூளையோ பையில் பணம் இருக்கிறது வேண்டாம் என்றது ஆளும் பார்பதற்கு டிசன்ட்ஆகவே தெரிந்தார் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இங்க திருடிட்டு எப்படியும் போக முடியாது என்ற நம்பிக்கையில் அந்த நபரை வண்டியில் ஏற்றினர், அந்த நபர் ராமையாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வண்டியில் ஏறினார்

" எங்க சார், போகணும்?"

" சார் என்னை அடுத்த தெருவுல எறக்கி விட்டுருங்க"

" சரி வாங்க"

வண்டி அடுத்த தெருவினை அடைந்தது அவர் இறங்கும் இடமும் வந்தது. 

ஒரு காரின் அருகில் அருகே இறங்கி கொண்டு மீண்டும் நன்றி தெரிவித்து கொண்டு அந்த காரின் கதவை திறந்தார் ராமையா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார் 

" என்ன சார் பார்க்குறீங்க, இது என்னோட கார் தான் பக்கத்துக்கு தெருல ஒரு கடைக்கு போக வேண்டி இருந்தது, அந்த தெருவே சின்ன தெரு நான் ஒருத்தன் போகணும்கிறதுக்காக அந்த தெருல இவ்வளோ பெரிய கார எடுத்துட்டு பொய் அடைக்க விரும்பல"

என்று அடக்கத்தோடு கூறினார், இவரை மாதிரியே ஒவ்வொரு மனிதனும் இருந்தால் எந்த ஊரில் டிராபிக் ஜாம் இருக்காது என எண்ணி கொண்டு வண்டியை நகர்த்தினார் 

அவரை இறக்கி விட்டு ராமையா சென்று கொண்டிருந்தார், அடுத்த சில நொடிகளில் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறும் சத்தம் கேட்டது, ராமையா என்ன வென்று வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தார், தான் இறக்கி விட்ட அந்த நபர் தோளில் குண்டு துளைத்தது, மறுகணமே மீண்டும் இரு தோட்டாக்கள் மேலும் சென்று அவரின் உடம்பை துளையிட்டது அக்கணமே அவர் சரிந்து கீழே விழுந்தார் ஒரு நிமிடம் கண்ணே கெட்டி விட்டது அவருக்கு, டி வீ யில் கொலையை பார்த்தாலே அனைத்து விடும் அவரின் முன்னாள் ஒரு கொலை 

அடுத்த சில நொடிகளில் ராமையா வண்டியை நோக்கி சிலர் மறித்து சுற்றி வளைத்தனர் முதலில் அவர்களை ரவுடி கும்பல் என நினைத்த நான் அவர்களின் காக்கி நிற கால் சட்டையினை, காலில் அணிந்திருந்த ஷீவை பார்த்ததுமே புரிந்துவிட்டது அவர்கள் காவல் துறையினர் என்று, ராமையாவின் உடம்பு வேடவடத்தது உடம்பெங்கும் வியர்க்கதத் தொடங்கியது 
நல்ல வாட்ட சட்டமான ஒருவர் ராமையாவின் முன்னாள் வந்து நின்றார் 

" வண்டிய விட்டு கீழ இறங்குடா?"

அவர் கூறிய அந்த தோரணையில் என்ன எது என்று கேளாமல் மறுகணம் ராமையாவும் வண்டியினை விட்டு கீழே இறங்கினார் 

" யாரு நீ?, எங்கிருந்து வர்ற?, உனக்கும் ஷங்கருக்கும் என்ன சம்பந்தம்?"

என கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார், ராமையாவுக்கு ஒன்றும் புலப்படவில்லை, தான் யார் எங்கிருந்து வருகிறேன் என்றேன் என்ற முழு விபரத்தையும் சொன்னார். அந்த அதிகாரியின் கண்களை உடற்று நோக்கி அவர்கள் கேட்டு கொண்டிருந்த கேள்விகளுக்கு பதில் கூறினார்,  இருப்பினும்  அந்த அதிகாரி அதை நம்பவில்லை என்பது அவரது கண்களில் தெரிந்தது  

தனக்கு கீழே வேலை செய்யும் ஒருவரை அழைத்து ராமாவை முழுமையாக சோதனை செய்யும் படி உத்தரவிட்டார் 
உடனே அந்த காவலாளியும் உடம்பு முழுக்க சோதனை செய்தார்



"என்னையா கத்தி, துப்பாக்கி எதாவது வெச்சுருக்கான?"

" அதெல்லாம் இல்ல சார், பணம் மட்டும் வச்சுருக்கான்"

" அதை வெளில எடு"

என உத்தரவு பிறப்பிக்க ராமையாவின் பையில் இருந்த மொத்த சம்பள பணத்தையும் எடுத்து அந்த அதிகாரிக்கு கொடுத்தார், அந்த அதிகாரி அந்த பணத்தின் வாசனையை மோப்பம் பிடித்து விட்டு தனது சட்டை பையினுள் அந்த பணத்தினை நுழைத்தார்

" உன் பேச்சுல எனக்கு இன்னும் நபிக்கை வரல, இருந்தாலும் நான் உன்ன விடுறேன் இனிமேல் இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாத ஆளுகெல்லாம் லிப்ட் கொடுக்காத புரிஞ்சதா?"

" யோவ், எட்டு இவன் வீடு எங்க இருக்குனு கேட்டு எழுதி வாங்கிட்டு அவனை அனுப்பிடு"

என்று சொல்லி கொண்டு பணத்தினை எடுத்து கொண்டு நகர்ந்தார் அந்த அதிகாரி, ராமையா வீட்டு முகவரியை தந்து விட்டு 

" சார், பணம்" என்றார் 


" யோவ் , போயா ஐயா ஏற்கனவே கோவமா இருக்கார், நீ வேற பணத்தை கேட்டு மேற்கொண்டு அவர கோவப்படுதாதா"


" பேசாம இங்கிருந்து போய்டு, அதன் உனக்கு நல்லது"

" சார் பணம் இல்லாம என்னால வீட்டிற்கு போக முடியாது"

" இப்போ நீ கிளம்ப போறியா, இல்ல உன்ன உள்ள தூக்கி போடவா?"
என போலீசாருக்கு உரிய தோரணையில் பேசினார்

" சார் அது என்னோட சம்பள பணம் சார் , அதை வெச்சு தான் இந்த மாசம்  என்னோட குடும்பத்த நடத்தனும் வீட்டுல என்னோட பொண்டாட்டி, குழந்தைங்க எல்லாம் என்னை எதிர் பார்த்து காத்துகிட்டு இருப்பாங்க உங்கள கெஞ்சி கேக்குறேன் சார் கொடுத்திருங்க?"

" நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க"

என கூறி ராமையாவின் கண்ணத்தில் பளார் என ஒரு அரை விட்டார், ராமையா நிலை தடு மாறி தனது வண்டியின் மேல் விழுந்தார் தனது பிள்ளைகளுக்காக ஆசையாக வாங்கிய இனிப்புகள் கீழே சிதறி விழுந்தன

"ஏட்டு, அங்க என்னையா சத்தம்?"

" அது ஒன்னும் இல்ல சார்"

" யோவ், ஒழுங்கா இடத்தை காலி பன்னு அது தான் உனக்கு நல்லது புரியுதா?"

அதிகார வர்க்கத்தினை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலையில் தான் இல்லை என்பதனை புரிந்து கொண்டு ராமையா கலங்கிய கண்களுடன் வண்டியினை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்

வீட்டினுள் நுழைந்ததும் தெய்வானை 

"என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க, என்ன ஆச்சு உங்களுக்கு சொல்லுங்க?"

குழந்தைகள் ஓடி வந்து அவரை ஒட்டி கொண்டு 

"என்னப்பா, இன்னைக்கு ஸ்வீட் ஏதும் வாங்கிட்டு வரலையா?" 
என கேட்டது 

இவர்கள் கேட்ட அதைனை கேள்விகளுக்கும் ராமையாவின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.....

முற்றும்.

Saturday, March 17, 2012

"கடைசி சந்திப்பு" - சிறுகதை

                        காவ்யா அழகான மனைவி, குடும்ப தலைவி, அம்மா என ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றி கொண்டிருக்கும் ஒரு சராசரி குடும்ப பெண் வாழ்வில் எந்த விதமான குறையும் இல்லை என்று எவராலும் கூற முடியாது குறைகளை மறைத்து கொண்டு வாழ்வினை இன்ப மயமாக மாற்றுவதில் தான் வாழ்கையின் சுவாரசியம் உள்ளது என்பதனை கற்றுக்கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்


"அளவான குடும்பம், தெவிட்டாத இன்பம்" என்ற எண்ணம் கொண்டவன் சரவணன் , திருமணதிற்கு பிறகு காவ்யா மற்றும் குழந்தை தான் உலகம் என்று உள்ளவன்


இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கபட்ட திருமணமே
ஆனால் இவர்கள் வாழும் விதத்தினை மற்றவர்கள் பார்த்து உங்களுடையது காதல் திருமணம் தானே? என்று நெறைய பேர் அவர்களிடம் கேட்டுள்ளனர்
அந்த அளவிற்கு அன்யோன்யமும், காதலும் இவர்களின் வாழ்வில் நிறைத்திருந்தது


சரவணின் அலுவலகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதை வீட்டிற்கு வந்தவுடனே மறக்க செய்துவிடுவாள் தன்னுடைய என் இன்முகத்தால்


அன்றும் அது போல தான் அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்
படைத்தலைவனை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவியை போல, வீட்டின் வாசலையே உற்று நோக்கி கொண்டிருக்கும் காவ்யா அன்று அங்கு இல்லை

சரி, ஏதோ வேலையாக இருப்பாள் என்று எண்ணி கொண்டான்

 வீட்டின் உள்ளே அவன் எப்போதும் நுழைந்ததும் துண்டினை அவன் கையில் கொடுத்து முகம், கை, கால் கழுவி விட்டு உள்ளே வாங்க என்று அன்பு கட்டளையும் இன்று இல்லை


இவளுக்கு இன்று என்னவாகி விட்டது என்று வீடு முழுவதும் அவளை தேடினான், வீட்டின் மாடி, உற்றம் என அணைத்து இடங்களையும் தேடி கடைசியாக வீட்டின் பின் புறம் தேடினான்


வீட்டின் கிணற்றின் சுற்று சுவரின் மீது சாய்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள்

காவ்யாவின் முகத்தில் இருக்கும் அக்மார்க் புன்னகை அன்று இல்லை, மாறாக அவள் கன்னத்தில் உள்ள வடுக்கள் அவள் அழுததற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்தது



சரவணன் அவள் அருகில் சென்று அவள் தோலை பிடித்து உலுக்கினான்
எந்த வெளிப்பாடும் இல்லை அவளிடம்

"காவ்யா, காவ்யா"

என்று மீண்டும் ஒரு முறை அவள் பெயரினை கூறி அவளை அழைத்தான்

பின்பு அவளின் நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய்

" வந்துடீங்களா,  எப்போ வந்தீங்க?"

என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்

" நான் வந்தது இருக்கட்டும், உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி இங்க வந்து தனியா உட்காந்திருக்க?"

" அது ஒன்னும் இல்லை, சும்மா தான்"

" உண்மையை சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு?"

" இல்லை என்னோட அம்மா நினைப்பாவே இருக்கு"

சரவணக்கு தெரியும் அவளுக்கு அவள் அம்மா என்றல் உயிர், பாவம் நாம் யார் மேல் அதிகம் அன்பு வைத்துள்ளோமோ அவர்களின் உயிரை தான்
கடவுள் மிகவும் சீக்கிரமாக எடுத்து கொள்கிறேன்

காவ்யாவிற்கு எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியவில்லை, இருப்பினும் தன் அன்பு அவளை சரிக்கட்டும் என்பதில் சரவணனுக்கு
சந்தேகமில்லை

அவளை வீட்டினுள் அழைத்து சென்று அவளை ஒரு வழியாக சமாதனம் செய்தான், அவளுக்கு தோசை ஊற்றி கொடுத்து, பின்பு பாத்திரங்களை கழுவி படுக்கை அறைக்கு வந்தான் பின்பு காவ்யாவின் தலையை தன்னுடைய மடி மேல் வைத்து தாயின் அரவணைப்பில் தூங்கும் குழந்தையை போல அவளை படுக்க வைத்து காவ்யாவை தூங்க வைத்த சந்தோஷத்தில் தானும் தூங்கினான்


ஆனால், காவ்யாவோ கண்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்தாள்
சரவணனை போல தான் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு கணவன் வரவேண்டும் என்று அணைத்து பெண்களும் நினைப்பார்கள்,

கடவுளோ அந்த கொடுப்பினையோ அனைவருக்கும் கொடுப்பதில்லை
இப்படிப்பட்ட கணவன் தனக்கு வாய்த்தது உண்மையில் தன்னுடைய அதிர்ஷ்டமே என்று எண்ணிக்கொண்டாள்

இப்படி அன்பாக இருக்கும் சரவணனிடம் உண்மையை சொல்லலாமா, வேண்டாமா என்று அவள் மனதில் ஓடும் போராட்டத்தினை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது

இப்படியான கடும் மன அழுத்தத்திலும் அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை


மறுநாள் காலை சரவணனை அலுவலகம் அனுப்பிவிட்டு, தனது வழக்கமான வீட்டு வேலைகளை பார்க்க துவங்கினாள், ஹாலில் இருந்து தொலைபேசி
ஒழித்தது


அவளது மனம் படபக்க ஆரம்பித்தது, நேற்று வந்த அதே தொலைபேசி அழைப்பாக இருக்குமோ என்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டாள்

அதற்குள் தொலை பேசி நின்று விட்டது, நிம்மதி பேரு மூச்சு விட்டாள்

மீண்டும் தொலைபேசி ஒலித்தது இந்த முறை தொலைபேசியை எடுப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை, அப்போது அவளின் நினைவுகளுக்கு வந்தது தனது கைபேசி இரண்டு நாட்களாக வேலை செய்ய வில்லை என்று அதனால் ஒரு வேலை அவள் தந்தையாக இருக்குமோ என்று எண்ணினாள்


மெதுவாக தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்


தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவுடனே தெரிந்து விட்டது நேற்று அவள் கேட்ட அதே குரல் தான் என்று மறுமுனையில் அந்த குரலை மட்டும் கேட்டுகொண்டிருந்தாள் இவள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை


அழைப்பினை முழுமையாக கேட்டுவிட்டு சட்டென்று சரிந்து விழுந்தாள்,

அடுத்த நிமிடம் அவளுக்கு உலகமே நின்று விடும் போல இருந்தது

அன்று வழகதிற்காக மாறாக சரவணன் வெகு விரைவாக வீட்டிற்கு வந்தான்
வீட்டுக்குள் வந்தவனுக்கு காவ்யா இருக்கும் நிலைமை அவனை நிலை குலைய செய்தது


அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து காவ்யாவை எழுப்பினான்


"காவ்யா எழுந்திரிமா என்னாச்சு உடம்பு ஏதும் சரி இல்லையா, டாக்டர் கிட்ட போகலாமா? "


காவ்யா சரவணனின் மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்
சரவணனுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை

" ஏதுவ இருந்தாலும் என்கிட்ட சொல்லுமா பரவாஇல்லை"

இதற்கு மேல் சரவனணிண்டம் இதை மறைப்பதில் காவ்யாவிற்கு விருப்பம் இல்லை

" குமாரை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க"


அவள் குமார் என்று கூறியவுடனே புரிந்து விட்டது அந்த குமார் என்று?


குமார் காவ்யாவின் முன்னால் காதலன், காவ்யாவின் வீட்டில் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்ட நேரத்தில் குமாரின் வீட்டில் உள்ளவர்கள் இதனை ஏற்று கொள்ளவில்லை


இரு வீட்டாரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதில் காவ்யாவிற்கு உடன்பாடு இல்லை, ஆதலால் குமாரை காவ்யா பிரிய நேரிட்டது


ஒரு வழியாக காவ்யாவின் பெற்றோர் காவ்யாவின் மனதை தேற்றி காவ்யாவிற்கு சரவணனை திருமணம் செய்து வைத்தனர்


இந்த விஷயம் சரவணனுக்கு திருமணத்திற்கு முன் தெரியாது,  காவ்யா தங்களுடைய முதலிரவில் அனைவரையும் வெளிப்படையாக சொல்லிவிட்டாள் அதன் பின்னர் குமார் என்ற வார்த்தை அவள் வாழ்வில் குறுக்கிடவில்லை


" எப்படிமா அவருக்கு என்னாச்சு?"


" தெரியலைங்க"


" சரி நீ பொய் முகத்தை கழுவிட்டுவா நம்ம பொய் பார்த்துட்டு வரலாம்"

காவ்யாவிற்கு போவதா, வேண்டாமா என்று ஒரே குழப்பம் இறுதியாக
அவள் சரவணனுடன் கிளம்பினாள்

மருத்துவமனையில் சென்றவுடன் குமார் அனுமதிக்கபடிருக்கும் இடத்தினை கேட்டறிந்து சென்றனர்

காவ்யா, சரவணனையும் உள்ளே வருமாறு அழைத்தாள்

" இல்ல, வேண்டாம் டா இங்க தான் என்னோட நண்பர் ஒருத்தர் டாக்டரா இருக்கார் நான் அவரை பார்த்துட்டு, அப்படியே குமார் உடம்பு எப்படி இருக்குனு கேட்டுட்டு வரேன்"

என்று சொல்லிவிட்டு அந்த இடத்தினை விடு நகர்ந்தான்

காவ்யா உள்ளே நுழைய முயன்றாள்

" உள்ளே டாக்டர் இருக்காங்க, நீங்க கொஞ்ச நேரம் வெளில காத்திருங்க"
என்று கூறினார்கள்


வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள், அவளின் கை மேலே இன்னொரு பெண்ணின் கை ஆறுதல் படுத்தியது


காவ்யா திரும்பி யார் என்று நோக்கினாள், அது குமாரின் தங்கை தீபா


" அவருக்கு இப்போ எப்படி இருக்கு தீபா?"


" இல்லை அண்ணி, கொஞ்சம் கவலைக்கிடம்தான் என்று சொல்லினாள்"


காவ்யாவின் கண்களில் கண்ணீர் அரும்புவதை அவளால் நிறுத்தமுடியவில்லை

" அண்ணி, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?"

அவள் என்வென்று கண்களால் கேட்டாள்

" அண்ணி இத இந்த சமயத்துல சொல்லலாமான்னு தெரியல, இருந்தாலும் உங்க கிட்ட மறைக்க என் மனசு விரும்பல "

" நீ என்ன சொல்ற?"

" அதுவந்து அண்ணி, நீங்களும் எங்க அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறிங்கன்னு சொன்னவுடனே எங்க வீட்டுல எல்லோரும் சம்மதம் தான் சொன்னங்க, ஆனால் அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு எங்க அண்ணனே வந்து இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடுங்கனு சொன்னார்

எங்களுக்கு ஒண்ணுமே புரியல, சரி நீங்க ரெண்டு பெரும் எதாவது சண்ட போடிருப்பிங்கனு நினைச்சோம் அதுக்கு அப்புறம் ஒரு நாள் என்னோட அண்ணன் உங்களோட கல்யாண பத்திரிக்கையை வெச்சு பார்த்து அழுது கொண்டிருந்தான்"

" அப்போ அவன் கிட்ட கேட்டேன், என்ன ஆச்சு என் கல்யாணத்தை வேண்டாம்னு சொன்ன?"


" அப்போது தான் தனக்கு கேன்சர் இருப்பதாகவும், அதனால் தான் உங்களை கட்டிகொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தான்"


" பின்பு நாங்களும், எவ்வளவோ மருத்துவமனைக்கும் அவனை அழைத்து சென்றும் பலன் இல்லை"


" அவனின் இருந்தி நாட்களை அவன் எண்ணி கொண்டிருக்கிறான் என்று கூறினார்கள்"


" இதை உங்களிடம் கூறலாமே என்று எவ்வளவோ எடுத்து கூறியும் என்னுடைய அண்ணன் ஒத்துக்கொள்ளவில்லை, கடைசி வரை இதை உங்களிடம் கூற வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டான், ஆனால் என் மனது கேட்கவில்லை அதனால் தான் அனைத்தையும் உங்களிடம் கொட்டி தீர்த்தேன்"


"கடைசியாக என்னோட அண்ணன் என்கிட்ட கேட்ட ஒன்னு சாகறதுக்குள்ள உங்கள ஒரு முறை பார்க்கணும்கிறது தான்"


"இருந்தாலும் அவனோட ஆசையை எப்படி நிறைவேற்ற போறம்னு தெரியல,
உங்களோட சந்தோஷமான வாழ்கையை நான் குறுக்கிட விரும்பல அதே நேரத்துல மரண படுக்கைல இருக்கிற என் அண்ணனோட ஆசையை நிறைவேற்றலனா நான் மனுஷியே இல்லை"


"அதன் பின்பு தான் உங்களோட கணவர் சரவணனை தற்செயலாக சந்திச்சேன்
அவர்கிட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்"


" அவர் தான் உங்க வீட்டுக்கு போன் பண்ணி உங்ககிட்ட நேரடியா இதை சொல்ல சொன்னார், நான் என் சின்ன அண்ணன் விட்டு பேச சொன்னேன்"


" நீங்க இபோ இங்க வந்ததுக்கு நான் சரவணனுக்கு தான் நன்றி சொல்லணும்"


என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே டாக்டர்கள் வெளியில் சென்று விட நீங்கள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று கூறினார்கள்


காவ்யா கண்களை துடைத்து கொண்டே உள்ளே சென்றாள்
அங்கு குமார் மரணத்தின் பிடியில் போராடி கொண்டிருந்தான், காவ்யாவை கண்டவுடன் குமாரின் கண்கள் கண்ணீர் மிதந்தது இருவரும் பேசிக்கொள்ளவில்லை மாறாக இருவரின் கண்களும் பேசிக்கொண்டிருந்தது


காவ்யா குமாரின் கைகளை எடுத்து தான் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டாள், காவ்யாவின் கண்ணீர் துளிகள் குமாரின் கைகளில் பட்டது


அந்த தருணத்தில் குமாரின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது, வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சரவணனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.


முற்றும்.

Wednesday, February 15, 2012

சிரிப்பதா, அழுவதா??



சிரிப்பதா, அழுவதா??


என்னை அவள் வெறுக்கிறாள்
என்று தெரிந்து கொண்டேன் 
நான் கொடுத்த காதல் கடிதங்களை
என் முகத்தில் அவள் தூக்கி
எறிந்தபோது??


பள்ளியில் என்னை ஆசிரியர் 
மற்றவர்கள் முன்னிலையில் 
வீட்டு பாடங்களை கேட்டது 
அவமானம் என்று கருதி அதன் பின்பு 
பள்ளிக்கு செல்லாத நான் 


இன்று இதனை பேர் முன்னிலையில் 
என்னை வேண்டாம், 
என்னை தொந்தரவு செய்யாதே 
என கூறியும் அவள் பின்னால்
நாய் போல திரியும் இந்த மனதை
நான் என்ன வென்று சொல்வேன் 


கைபேசியில் குறுஞ்செய்தி சத்தம்
கேட்டவுடன் அவள் ஏதும் செய்தி 
அனுப்பி இருப்பாளோ?
என்று என்னை நானே ஏமாற்றி
கொள்ளும் இந்த காதலை என்னவென்று 
சொல்வேன்


இறுதியாக நான் காத்திருந்த அந்த 
நாளும் வந்தது என்னவளிடம் 
அழைப்பு வந்தது 


மனம் எண்ணில் அடங்க கற்பனைகளோடு 
அவளிடம் பேசினேன் அப்போது 
அவள் தான் தெரிந்தது என் மீது 
பாசத்தோடு அவள் என்னை அழைக்கவில்லை 


அவளின் திருமண தேதியை என்னிடம்
தெரிவிக்க என்று 


சிரிப்பதா, அழுவதா???