Wednesday, August 25, 2010

காதல்

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்பது பழமொழி,
அது 
காதலில் மட்டும் விதிவிலக்கு 
ஐந்திலும் வரும், ஐம்பதிலும் வரும் அது தான் காதல்...

எனக்குள்ளும் காதல் நுழைந்தது என்னை கேட்காமல்,
அவள் என் தோழியாக அறிமுகம் ஆன பின்பு,

நேரத்தின் மதிப்பு தெரிந்தது, அவள் அருகில் இல்லாத போது
ஒவ்வொரு வினாடியும் நரகங்களை போல நகர்ந்தது..

எனக்கு என் இப்படி ஆனது என்று ஒவ்வொரு வினாடியும்
எனக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது  என்னால்,

பல வருடங்களை பழகியதை போல ஒரு உணர்வு அவளை பழகும்
ஒவ்வொரு நொடியும்,

அவள்
நேற்று, என் தோழி

இன்று, என் காதலி

நாளை, என் மனைவி


பொறுத்திருந்து பார்ப்போம்

1 comment:

  1. un varnanaigal, un unarvugal, un karpanai thiran menmelum valara yen manamarndha vazhthukal!!!

    ReplyDelete