Thursday, October 11, 2012
Tuesday, October 9, 2012
கடல் கடந்து..
இடம் பெயர்ந்து
இன்ப துன்பங்களை மறந்து
உற்றார், உறவினர், நண்பர்களை பிரிந்து
கடல்களை கடந்து வந்திருக்கும்
என்னைப் போன்றோர்க்கு
எத்தனை கோடி ஊதியம் கொடுத்தாலும்
தாயின் மடிக்கும்,
தந்தையின் அதட்டலுக்கும்,
சகோதரியின் பாசத்திற்கும்,
ஏங்கித் தானே கிடக்கும் இந்த மனசு?
அந்நிய மண்ணில் கால் எடுத்து வைத்த முதல் நாள்,
எழுதிய வரிகள்...
Tuesday, October 2, 2012
யானை பசி
கடை தெருவிற்கு சென்று காய்கறிகளை
வாங்க சென்றேன்
மீதி சில்லறை 5 ரூபாய்க்கு பதிலாக
சிறிய இனிப்பு பொட்டலத்தை கொடுத்தான்
அந்த கடைக்காரன்
அதை வாங்கி கொள்ள மனம்
வராததால் மீதி சில்லரையினை கேட்டு
சண்டை போட்டேன்
போகட்டும் 5 ரூபாய் தானே
என்றது மனது , ஆனால் மறுபுறமோ
கேளு இது உனது உரிமை என்றது
ஒரு வழியாக மீதி சரியான சில்லறையை
வாங்கிகொண்டு நடந்தேன்,
வரும் வழியில் ஒரு பிச்சைகாரன் கையை
நீட்டி உதவி கேட்டுகொண்டிருந்தார்
முகத்தை பார்க்கவும் மிகுந்த வறுமையும், பசியும்
இருப்பது கண்களில் தெரிந்தது
பாக்கெட்டினுள் கையை நுழைத்தேன்
5 ரூபாய் வந்தது, ஹ்ம்ம் கடைக்காரனிடம்
சண்டை போட்டு வாங்கிய அதே 5 ரூபாய் தான்
அந்த ரூபாயினை கொடுத்து விட்டு சிறிது தூரம்
நடந்து சென்று பின்னல் திரும்பி பார்த்தேன்
அந்த பிச்சைக்காரர் அருகினில் இருந்த
தேனீர் விடுதியினில் ஒரு தேனீரினை
பருகி கொண்டிருந்தார்
ஏதோ என்னால் முடிந்த அளவு அவரின் பசியினை
தீர்க்க முடியாவிட்டாலும், யானை பசிக்கு
சோளைபோரியை...
Tuesday, May 29, 2012
அக்கணம் என்ன செய்வேன்? - சிறுகதை
ராமையா அந்த கடைசி டேபிளை கவனி என்ற முதலாளியின் குரலுக்கு கட்டுப்பட்டு அந்த டேபிளை நோக்கி நகர்ந்தார் ராமையா
15 வருடங்களாக அதே ஹோடேலில் வேலை பார்ப்பவர்,ஹோட்டலின் தரம் உயர்ந்ததே தவிர இந்த மனிதனின் வழக்கை தரம் உயரவில்லை
தங்களது வியர்வைத் துளிகளை பணமாக மாற்றி முதலாளியின் கஜானாவை நிரப்பும் மனிதர்களில் இவரும் ஒருவர்
இட்லி, பொங்கல், வடை, ஊத்தாப்பம், தோசை, ரவை தோசை என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் தான் 15 வருடங்கள் ஓதிய மந்திரத்தினை கடகடவென சொல்ல ஆரம்பித்துவிடுவார்
ராமையாவும் சாதாரண ஆள் இல்லை, சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் சென்றாலும் இவர் மன்னித்துவிடுவார், ஆனால் டிப்ஸ் வைக்காமல் சென்றால் அவ்வளவுதான் சிறந்த கேட்ட வார்த்தைகள் பத்தினை தெரிவு செய்து மனதிற்குள்ளே அர்ச்சிக்க ஆரம்பித்துவிடுவர் அவ்வளவு நல்ல குணம் அவருக்கு
கடைசி டேபிளில் உள்ளவர் இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர் என்பதால் ராமையா விழுந்து விழுந்து கவனிப்பார் அதுமட்டுமில்லாது அவர் நிறைய டிப்ஸ் வைப்பார் என்பதும் மற்றொரு காரணம்
கடைசி டேபிளில் உள்ளவர் இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர் என்பதால் ராமையா விழுந்து விழுந்து கவனிப்பார் அதுமட்டுமில்லாது அவர் நிறைய டிப்ஸ் வைப்பார் என்பதும் மற்றொரு காரணம்
வேலையினை முடித்து விட்டு வழக்கம் போல ராமையா தனது டி.வீ.எஸ் வண்டியினை எடுத்து கொண்டு கிளம்பினர்
வீட்டிற்க்கு சென்றதும் கை கால்களை கழுவி விட்டு டி.வீ யை போட்டு விட்டு அதன் முன்னே அமர்ந்தார்
" தெய்வானை தெய்வானை"
" வரேங்க, அடுப்படில இருக்கேன் கொஞ்சம் பொறுங்க"
அடுப்படியை விட்டு வெளியில் வந்தாள் தெய்வானை
நல்ல வாட்ட சட்டமான ஒருவர் ராமையாவின் முன்னாள் வந்து நின்றார்
" யோவ் , போயா ஐயா ஏற்கனவே கோவமா இருக்கார், நீ வேற பணத்தை கேட்டு மேற்கொண்டு அவர கோவப்படுதாதா"
" தெய்வானை தெய்வானை"
" வரேங்க, அடுப்படில இருக்கேன் கொஞ்சம் பொறுங்க"
அடுப்படியை விட்டு வெளியில் வந்தாள் தெய்வானை
" என்னங்க?"
" பசங்க தூங்கிடாங்களா?"
" இவ்வளோ நேரம் முழிச்சிருந்து இப்போ தன தூங்கினாங்க"
" ம்ம்ம், பெரியவளுக்கு உடம்பு எப்படி இருக்கு?"
" இன்னைக்கு கொஞ்சம் தாவல"
" அவளோட மருந்து அடுத்த வரம் தீர்ந்து போய்டும், மறந்திடாம நாளைக்கு வாங்கிட்டு வாங்க?"
" ம்ம்ம், வாங்கிட்டு வரேன்"
" அப்புறம் சின்னவனுக்கு ஏதோ எக்ஸாம் பீஸ் கட்டணும்னு சொன்னங்க"
" எவ்வளுவு ரூபாய்?"
"1800"
இந்த செலவுகள் அனைத்தையும் தனது குறிப்பேட்டில் குறித்து வைத்து கொண்டார் ராமையா ஏனெனில் அடுத்த வாரம் அவர் வீட்டு மாத பட்ஜெட்டில் இவை முக்கிய அங்கங்களாக இருக்கும்
ராமையா படிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார், தான் படிக்காத காரணத்தில் தான் அஞ்சுக்கும், பத்துக்கும் அடுத்தவங்க கைய எதிர் பார்க்க வேண்டிருக்கு அதனால் தான் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பது ராமையாவின் ஆசை மட்டும் மல்ல, தெய்வானையின்
கனவும் கூட அதனால் தான் அவர் தன்னுடைய தகுதிக்கு மீறிய பெரிய பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து கொண்டிருக்கிறார்
சம்பள நாளை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர் தத்தம் தேவைகளை பூர்த்தி செய்ய
சம்பள நாள் அன்று ஹோடெல்லில் வேலை பார்க்கும் அனைவரின் முகத்தில் ஒரு அதிகமான பிரகாசம் ஒன்று இருக்கும்
அன்று வழக்கத்தினை விட அனைவரும் சீக்கிரமே வேலைக்கு வந்து விடுவார்கள், அதே போல் வேலையும் வேகமாக நடக்கும்
இது அனைத்து இடங்களிலும் நடக்கும் பொதுவான ஒன்றே
அந்த நாளில் யாரேனும் டிப்ஸ் வைக்க விட்டாலும் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவர், மொத்தத்தில் அன்று அந்த ஹோடெல்லில் ராமையா யாருக்கு சப்ளை செய்தாலும் அவர்கள் கண்ணனுக்கு ராமையா ஒரு நல்ல மனிதனாகவே தெரிவார்
ராமையா சம்பளம் வாங்கியவுடன் வாய் நிறைய புன்னகையோடு தனது வண்டியை கிளப்பினார்
தலைவியை விட்டு சென்று போருக்கு சென்ற தலைவனின் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கும் தலைவியை போல தெய்வானை வீட்டின் வாயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள், அவ்வபோது ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்யப்பட்ட இந்த மாத பட்ஜெட்டினை ஒரு முறைக்கு, இரு முறை சரி பார்த்து கொண்டிருந்தாள் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்று
ராமையா வழியில் தான் குழந்தைகளுக்கு பிடித்த பலகாரங்களை வாங்கி கொண்டு சென்று கொண்டிருந்தார், தான் வழக்கமாக செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஆதலால் தனது பணத்திற்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய அவர் அந்த வழியில் செல்லாமல் மாற்று வழியில் சென்றார்
அவர் இப்போது சென்று கொண்டிருக்கும் பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அது தனக்கும் தனது பணத்திற்கும் பாதுகாப்பு என்று கருதினர்
அவர் அந்த சாலையினை கடந்து கொண்டிருக்கும் போது, சாலையும் ஓரத்தில் ஒருவர் லிப்ட் வேண்டும் என்பது போல சமிக்கை செய்து கொண்டிருந்தார் மனமோ அவருக்கு இடம் கொடு என்றது, ஆனால் மூளையோ பையில் பணம் இருக்கிறது வேண்டாம் என்றது ஆளும் பார்பதற்கு டிசன்ட்ஆகவே தெரிந்தார் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இங்க திருடிட்டு எப்படியும் போக முடியாது என்ற நம்பிக்கையில் அந்த நபரை வண்டியில் ஏற்றினர், அந்த நபர் ராமையாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வண்டியில் ஏறினார்
" எங்க சார், போகணும்?"
" சார் என்னை அடுத்த தெருவுல எறக்கி விட்டுருங்க"
" சரி வாங்க"
வண்டி அடுத்த தெருவினை அடைந்தது அவர் இறங்கும் இடமும் வந்தது.
ஒரு காரின் அருகில் அருகே இறங்கி கொண்டு மீண்டும் நன்றி தெரிவித்து கொண்டு அந்த காரின் கதவை திறந்தார் ராமையா வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்
" என்ன சார் பார்க்குறீங்க, இது என்னோட கார் தான் பக்கத்துக்கு தெருல ஒரு கடைக்கு போக வேண்டி இருந்தது, அந்த தெருவே சின்ன தெரு நான் ஒருத்தன் போகணும்கிறதுக்காக அந்த தெருல இவ்வளோ பெரிய கார எடுத்துட்டு பொய் அடைக்க விரும்பல"
என்று அடக்கத்தோடு கூறினார், இவரை மாதிரியே ஒவ்வொரு மனிதனும் இருந்தால் எந்த ஊரில் டிராபிக் ஜாம் இருக்காது என எண்ணி கொண்டு வண்டியை நகர்த்தினார்
அவரை இறக்கி விட்டு ராமையா சென்று கொண்டிருந்தார், அடுத்த சில நொடிகளில் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறும் சத்தம் கேட்டது, ராமையா என்ன வென்று வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தார், தான் இறக்கி விட்ட அந்த நபர் தோளில் குண்டு துளைத்தது, மறுகணமே மீண்டும் இரு தோட்டாக்கள் மேலும் சென்று அவரின் உடம்பை துளையிட்டது அக்கணமே அவர் சரிந்து கீழே விழுந்தார் ஒரு நிமிடம் கண்ணே கெட்டி விட்டது அவருக்கு, டி வீ யில் கொலையை பார்த்தாலே அனைத்து விடும் அவரின் முன்னாள் ஒரு கொலை
அடுத்த சில நொடிகளில் ராமையா வண்டியை நோக்கி சிலர் மறித்து சுற்றி வளைத்தனர் முதலில் அவர்களை ரவுடி கும்பல் என நினைத்த நான் அவர்களின் காக்கி நிற கால் சட்டையினை, காலில் அணிந்திருந்த ஷீவை பார்த்ததுமே புரிந்துவிட்டது அவர்கள் காவல் துறையினர் என்று, ராமையாவின் உடம்பு வேடவடத்தது உடம்பெங்கும் வியர்க்கதத் தொடங்கியது
" வண்டிய விட்டு கீழ இறங்குடா?"
அவர் கூறிய அந்த தோரணையில் என்ன எது என்று கேளாமல் மறுகணம் ராமையாவும் வண்டியினை விட்டு கீழே இறங்கினார்
" யாரு நீ?, எங்கிருந்து வர்ற?, உனக்கும் ஷங்கருக்கும் என்ன சம்பந்தம்?"
என கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார், ராமையாவுக்கு ஒன்றும் புலப்படவில்லை, தான் யார் எங்கிருந்து வருகிறேன் என்றேன் என்ற முழு விபரத்தையும் சொன்னார். அந்த அதிகாரியின் கண்களை உடற்று நோக்கி அவர்கள் கேட்டு கொண்டிருந்த கேள்விகளுக்கு பதில் கூறினார், இருப்பினும் அந்த அதிகாரி அதை நம்பவில்லை என்பது அவரது கண்களில் தெரிந்தது
தனக்கு கீழே வேலை செய்யும் ஒருவரை அழைத்து ராமாவை முழுமையாக சோதனை செய்யும் படி உத்தரவிட்டார்
உடனே அந்த காவலாளியும் உடம்பு முழுக்க சோதனை செய்தார்
"என்னையா கத்தி, துப்பாக்கி எதாவது வெச்சுருக்கான?"
" அதெல்லாம் இல்ல சார், பணம் மட்டும் வச்சுருக்கான்"
" அதை வெளில எடு"
என உத்தரவு பிறப்பிக்க ராமையாவின் பையில் இருந்த மொத்த சம்பள பணத்தையும் எடுத்து அந்த அதிகாரிக்கு கொடுத்தார், அந்த அதிகாரி அந்த பணத்தின் வாசனையை மோப்பம் பிடித்து விட்டு தனது சட்டை பையினுள் அந்த பணத்தினை நுழைத்தார்
" உன் பேச்சுல எனக்கு இன்னும் நபிக்கை வரல, இருந்தாலும் நான் உன்ன விடுறேன் இனிமேல் இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாத ஆளுகெல்லாம் லிப்ட் கொடுக்காத புரிஞ்சதா?"
" யோவ், எட்டு இவன் வீடு எங்க இருக்குனு கேட்டு எழுதி வாங்கிட்டு அவனை அனுப்பிடு"
என்று சொல்லி கொண்டு பணத்தினை எடுத்து கொண்டு நகர்ந்தார் அந்த அதிகாரி, ராமையா வீட்டு முகவரியை தந்து விட்டு
" சார், பணம்" என்றார்
" யோவ் , போயா ஐயா ஏற்கனவே கோவமா இருக்கார், நீ வேற பணத்தை கேட்டு மேற்கொண்டு அவர கோவப்படுதாதா"
" பேசாம இங்கிருந்து போய்டு, அதன் உனக்கு நல்லது"
" சார் பணம் இல்லாம என்னால வீட்டிற்கு போக முடியாது"
" இப்போ நீ கிளம்ப போறியா, இல்ல உன்ன உள்ள தூக்கி போடவா?"
என போலீசாருக்கு உரிய தோரணையில் பேசினார்
" சார் அது என்னோட சம்பள பணம் சார் , அதை வெச்சு தான் இந்த மாசம் என்னோட குடும்பத்த நடத்தனும் வீட்டுல என்னோட பொண்டாட்டி, குழந்தைங்க எல்லாம் என்னை எதிர் பார்த்து காத்துகிட்டு இருப்பாங்க உங்கள கெஞ்சி கேக்குறேன் சார் கொடுத்திருங்க?"
" நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க"
என கூறி ராமையாவின் கண்ணத்தில் பளார் என ஒரு அரை விட்டார், ராமையா நிலை தடு மாறி தனது வண்டியின் மேல் விழுந்தார் தனது பிள்ளைகளுக்காக ஆசையாக வாங்கிய இனிப்புகள் கீழே சிதறி விழுந்தன
"ஏட்டு, அங்க என்னையா சத்தம்?"
" அது ஒன்னும் இல்ல சார்"
" யோவ், ஒழுங்கா இடத்தை காலி பன்னு அது தான் உனக்கு நல்லது புரியுதா?"
அதிகார வர்க்கத்தினை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலையில் தான் இல்லை என்பதனை புரிந்து கொண்டு ராமையா கலங்கிய கண்களுடன் வண்டியினை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்
வீட்டினுள் நுழைந்ததும் தெய்வானை
"என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க, என்ன ஆச்சு உங்களுக்கு சொல்லுங்க?"
குழந்தைகள் ஓடி வந்து அவரை ஒட்டி கொண்டு
"என்னப்பா, இன்னைக்கு ஸ்வீட் ஏதும் வாங்கிட்டு வரலையா?"
என கேட்டது
இவர்கள் கேட்ட அதைனை கேள்விகளுக்கும் ராமையாவின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.....
முற்றும்.
Saturday, March 17, 2012
"கடைசி சந்திப்பு" - சிறுகதை
காவ்யா அழகான மனைவி, குடும்ப தலைவி, அம்மா என ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றி கொண்டிருக்கும் ஒரு சராசரி குடும்ப பெண் வாழ்வில் எந்த விதமான குறையும் இல்லை என்று எவராலும் கூற முடியாது குறைகளை மறைத்து கொண்டு வாழ்வினை இன்ப மயமாக மாற்றுவதில் தான் வாழ்கையின் சுவாரசியம் உள்ளது என்பதனை கற்றுக்கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்
"அளவான குடும்பம், தெவிட்டாத இன்பம்" என்ற எண்ணம் கொண்டவன் சரவணன் , திருமணதிற்கு பிறகு காவ்யா மற்றும் குழந்தை தான் உலகம் என்று உள்ளவன்
இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கபட்ட திருமணமே
ஆனால் இவர்கள் வாழும் விதத்தினை மற்றவர்கள் பார்த்து உங்களுடையது காதல் திருமணம் தானே? என்று நெறைய பேர் அவர்களிடம் கேட்டுள்ளனர்
அந்த அளவிற்கு அன்யோன்யமும், காதலும் இவர்களின் வாழ்வில் நிறைத்திருந்தது
சரவணின் அலுவலகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதை வீட்டிற்கு வந்தவுடனே மறக்க செய்துவிடுவாள் தன்னுடைய என் இன்முகத்தால்
அன்றும் அது போல தான் அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்
படைத்தலைவனை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவியை போல, வீட்டின் வாசலையே உற்று நோக்கி கொண்டிருக்கும் காவ்யா அன்று அங்கு இல்லை
சரி, ஏதோ வேலையாக இருப்பாள் என்று எண்ணி கொண்டான்
வீட்டின் உள்ளே அவன் எப்போதும் நுழைந்ததும் துண்டினை அவன் கையில் கொடுத்து முகம், கை, கால் கழுவி விட்டு உள்ளே வாங்க என்று அன்பு கட்டளையும் இன்று இல்லை
இவளுக்கு இன்று என்னவாகி விட்டது என்று வீடு முழுவதும் அவளை தேடினான், வீட்டின் மாடி, உற்றம் என அணைத்து இடங்களையும் தேடி கடைசியாக வீட்டின் பின் புறம் தேடினான்
வீட்டின் கிணற்றின் சுற்று சுவரின் மீது சாய்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள்
காவ்யாவின் முகத்தில் இருக்கும் அக்மார்க் புன்னகை அன்று இல்லை, மாறாக அவள் கன்னத்தில் உள்ள வடுக்கள் அவள் அழுததற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்தது
சரவணன் அவள் அருகில் சென்று அவள் தோலை பிடித்து உலுக்கினான்
எந்த வெளிப்பாடும் இல்லை அவளிடம்
"காவ்யா, காவ்யா"
என்று மீண்டும் ஒரு முறை அவள் பெயரினை கூறி அவளை அழைத்தான்
பின்பு அவளின் நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய்
" வந்துடீங்களா, எப்போ வந்தீங்க?"
என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்
" நான் வந்தது இருக்கட்டும், உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி இங்க வந்து தனியா உட்காந்திருக்க?"
" அது ஒன்னும் இல்லை, சும்மா தான்"
" உண்மையை சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு?"
" இல்லை என்னோட அம்மா நினைப்பாவே இருக்கு"
சரவணக்கு தெரியும் அவளுக்கு அவள் அம்மா என்றல் உயிர், பாவம் நாம் யார் மேல் அதிகம் அன்பு வைத்துள்ளோமோ அவர்களின் உயிரை தான்
கடவுள் மிகவும் சீக்கிரமாக எடுத்து கொள்கிறேன்
காவ்யாவிற்கு எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியவில்லை, இருப்பினும் தன் அன்பு அவளை சரிக்கட்டும் என்பதில் சரவணனுக்கு
சந்தேகமில்லை
அவளை வீட்டினுள் அழைத்து சென்று அவளை ஒரு வழியாக சமாதனம் செய்தான், அவளுக்கு தோசை ஊற்றி கொடுத்து, பின்பு பாத்திரங்களை கழுவி படுக்கை அறைக்கு வந்தான் பின்பு காவ்யாவின் தலையை தன்னுடைய மடி மேல் வைத்து தாயின் அரவணைப்பில் தூங்கும் குழந்தையை போல அவளை படுக்க வைத்து காவ்யாவை தூங்க வைத்த சந்தோஷத்தில் தானும் தூங்கினான்
ஆனால், காவ்யாவோ கண்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்தாள்
சரவணனை போல தான் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு கணவன் வரவேண்டும் என்று அணைத்து பெண்களும் நினைப்பார்கள்,
கடவுளோ அந்த கொடுப்பினையோ அனைவருக்கும் கொடுப்பதில்லை
இப்படிப்பட்ட கணவன் தனக்கு வாய்த்தது உண்மையில் தன்னுடைய அதிர்ஷ்டமே என்று எண்ணிக்கொண்டாள்
இப்படி அன்பாக இருக்கும் சரவணனிடம் உண்மையை சொல்லலாமா, வேண்டாமா என்று அவள் மனதில் ஓடும் போராட்டத்தினை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது
இப்படியான கடும் மன அழுத்தத்திலும் அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை
மறுநாள் காலை சரவணனை அலுவலகம் அனுப்பிவிட்டு, தனது வழக்கமான வீட்டு வேலைகளை பார்க்க துவங்கினாள், ஹாலில் இருந்து தொலைபேசி
ஒழித்தது
அவளது மனம் படபக்க ஆரம்பித்தது, நேற்று வந்த அதே தொலைபேசி அழைப்பாக இருக்குமோ என்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டாள்
அதற்குள் தொலை பேசி நின்று விட்டது, நிம்மதி பேரு மூச்சு விட்டாள்
மீண்டும் தொலைபேசி ஒலித்தது இந்த முறை தொலைபேசியை எடுப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை, அப்போது அவளின் நினைவுகளுக்கு வந்தது தனது கைபேசி இரண்டு நாட்களாக வேலை செய்ய வில்லை என்று அதனால் ஒரு வேலை அவள் தந்தையாக இருக்குமோ என்று எண்ணினாள்
மெதுவாக தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்
தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவுடனே தெரிந்து விட்டது நேற்று அவள் கேட்ட அதே குரல் தான் என்று மறுமுனையில் அந்த குரலை மட்டும் கேட்டுகொண்டிருந்தாள் இவள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை
அழைப்பினை முழுமையாக கேட்டுவிட்டு சட்டென்று சரிந்து விழுந்தாள்,
அடுத்த நிமிடம் அவளுக்கு உலகமே நின்று விடும் போல இருந்தது
அன்று வழகதிற்காக மாறாக சரவணன் வெகு விரைவாக வீட்டிற்கு வந்தான்
வீட்டுக்குள் வந்தவனுக்கு காவ்யா இருக்கும் நிலைமை அவனை நிலை குலைய செய்தது
அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து காவ்யாவை எழுப்பினான்
"காவ்யா எழுந்திரிமா என்னாச்சு உடம்பு ஏதும் சரி இல்லையா, டாக்டர் கிட்ட போகலாமா? "
காவ்யா சரவணனின் மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்
சரவணனுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை
" ஏதுவ இருந்தாலும் என்கிட்ட சொல்லுமா பரவாஇல்லை"
இதற்கு மேல் சரவனணிண்டம் இதை மறைப்பதில் காவ்யாவிற்கு விருப்பம் இல்லை
" குமாரை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க"
அவள் குமார் என்று கூறியவுடனே புரிந்து விட்டது அந்த குமார் என்று?
குமார் காவ்யாவின் முன்னால் காதலன், காவ்யாவின் வீட்டில் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்ட நேரத்தில் குமாரின் வீட்டில் உள்ளவர்கள் இதனை ஏற்று கொள்ளவில்லை
இரு வீட்டாரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதில் காவ்யாவிற்கு உடன்பாடு இல்லை, ஆதலால் குமாரை காவ்யா பிரிய நேரிட்டது
ஒரு வழியாக காவ்யாவின் பெற்றோர் காவ்யாவின் மனதை தேற்றி காவ்யாவிற்கு சரவணனை திருமணம் செய்து வைத்தனர்
இந்த விஷயம் சரவணனுக்கு திருமணத்திற்கு முன் தெரியாது, காவ்யா தங்களுடைய முதலிரவில் அனைவரையும் வெளிப்படையாக சொல்லிவிட்டாள் அதன் பின்னர் குமார் என்ற வார்த்தை அவள் வாழ்வில் குறுக்கிடவில்லை
" எப்படிமா அவருக்கு என்னாச்சு?"
" தெரியலைங்க"
" சரி நீ பொய் முகத்தை கழுவிட்டுவா நம்ம பொய் பார்த்துட்டு வரலாம்"
காவ்யாவிற்கு போவதா, வேண்டாமா என்று ஒரே குழப்பம் இறுதியாக
அவள் சரவணனுடன் கிளம்பினாள்
மருத்துவமனையில் சென்றவுடன் குமார் அனுமதிக்கபடிருக்கும் இடத்தினை கேட்டறிந்து சென்றனர்
காவ்யா, சரவணனையும் உள்ளே வருமாறு அழைத்தாள்
" இல்ல, வேண்டாம் டா இங்க தான் என்னோட நண்பர் ஒருத்தர் டாக்டரா இருக்கார் நான் அவரை பார்த்துட்டு, அப்படியே குமார் உடம்பு எப்படி இருக்குனு கேட்டுட்டு வரேன்"
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தினை விடு நகர்ந்தான்
காவ்யா உள்ளே நுழைய முயன்றாள்
" உள்ளே டாக்டர் இருக்காங்க, நீங்க கொஞ்ச நேரம் வெளில காத்திருங்க"
என்று கூறினார்கள்
வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள், அவளின் கை மேலே இன்னொரு பெண்ணின் கை ஆறுதல் படுத்தியது
காவ்யா திரும்பி யார் என்று நோக்கினாள், அது குமாரின் தங்கை தீபா
" அவருக்கு இப்போ எப்படி இருக்கு தீபா?"
" இல்லை அண்ணி, கொஞ்சம் கவலைக்கிடம்தான் என்று சொல்லினாள்"
காவ்யாவின் கண்களில் கண்ணீர் அரும்புவதை அவளால் நிறுத்தமுடியவில்லை
" அண்ணி, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?"
அவள் என்வென்று கண்களால் கேட்டாள்
" அண்ணி இத இந்த சமயத்துல சொல்லலாமான்னு தெரியல, இருந்தாலும் உங்க கிட்ட மறைக்க என் மனசு விரும்பல "
" நீ என்ன சொல்ற?"
" அதுவந்து அண்ணி, நீங்களும் எங்க அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறிங்கன்னு சொன்னவுடனே எங்க வீட்டுல எல்லோரும் சம்மதம் தான் சொன்னங்க, ஆனால் அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு எங்க அண்ணனே வந்து இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடுங்கனு சொன்னார்
எங்களுக்கு ஒண்ணுமே புரியல, சரி நீங்க ரெண்டு பெரும் எதாவது சண்ட போடிருப்பிங்கனு நினைச்சோம் அதுக்கு அப்புறம் ஒரு நாள் என்னோட அண்ணன் உங்களோட கல்யாண பத்திரிக்கையை வெச்சு பார்த்து அழுது கொண்டிருந்தான்"
" அப்போ அவன் கிட்ட கேட்டேன், என்ன ஆச்சு என் கல்யாணத்தை வேண்டாம்னு சொன்ன?"
" அப்போது தான் தனக்கு கேன்சர் இருப்பதாகவும், அதனால் தான் உங்களை கட்டிகொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தான்"
" பின்பு நாங்களும், எவ்வளவோ மருத்துவமனைக்கும் அவனை அழைத்து சென்றும் பலன் இல்லை"
" அவனின் இருந்தி நாட்களை அவன் எண்ணி கொண்டிருக்கிறான் என்று கூறினார்கள்"
" இதை உங்களிடம் கூறலாமே என்று எவ்வளவோ எடுத்து கூறியும் என்னுடைய அண்ணன் ஒத்துக்கொள்ளவில்லை, கடைசி வரை இதை உங்களிடம் கூற வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டான், ஆனால் என் மனது கேட்கவில்லை அதனால் தான் அனைத்தையும் உங்களிடம் கொட்டி தீர்த்தேன்"
"கடைசியாக என்னோட அண்ணன் என்கிட்ட கேட்ட ஒன்னு சாகறதுக்குள்ள உங்கள ஒரு முறை பார்க்கணும்கிறது தான்"
"இருந்தாலும் அவனோட ஆசையை எப்படி நிறைவேற்ற போறம்னு தெரியல,
உங்களோட சந்தோஷமான வாழ்கையை நான் குறுக்கிட விரும்பல அதே நேரத்துல மரண படுக்கைல இருக்கிற என் அண்ணனோட ஆசையை நிறைவேற்றலனா நான் மனுஷியே இல்லை"
"அதன் பின்பு தான் உங்களோட கணவர் சரவணனை தற்செயலாக சந்திச்சேன்
அவர்கிட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்"
" அவர் தான் உங்க வீட்டுக்கு போன் பண்ணி உங்ககிட்ட நேரடியா இதை சொல்ல சொன்னார், நான் என் சின்ன அண்ணன் விட்டு பேச சொன்னேன்"
" நீங்க இபோ இங்க வந்ததுக்கு நான் சரவணனுக்கு தான் நன்றி சொல்லணும்"
என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே டாக்டர்கள் வெளியில் சென்று விட நீங்கள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று கூறினார்கள்
காவ்யா கண்களை துடைத்து கொண்டே உள்ளே சென்றாள்
அங்கு குமார் மரணத்தின் பிடியில் போராடி கொண்டிருந்தான், காவ்யாவை கண்டவுடன் குமாரின் கண்கள் கண்ணீர் மிதந்தது இருவரும் பேசிக்கொள்ளவில்லை மாறாக இருவரின் கண்களும் பேசிக்கொண்டிருந்தது
காவ்யா குமாரின் கைகளை எடுத்து தான் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டாள், காவ்யாவின் கண்ணீர் துளிகள் குமாரின் கைகளில் பட்டது
அந்த தருணத்தில் குமாரின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது, வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சரவணனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
முற்றும்.
"அளவான குடும்பம், தெவிட்டாத இன்பம்" என்ற எண்ணம் கொண்டவன் சரவணன் , திருமணதிற்கு பிறகு காவ்யா மற்றும் குழந்தை தான் உலகம் என்று உள்ளவன்
இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கபட்ட திருமணமே
ஆனால் இவர்கள் வாழும் விதத்தினை மற்றவர்கள் பார்த்து உங்களுடையது காதல் திருமணம் தானே? என்று நெறைய பேர் அவர்களிடம் கேட்டுள்ளனர்
அந்த அளவிற்கு அன்யோன்யமும், காதலும் இவர்களின் வாழ்வில் நிறைத்திருந்தது
சரவணின் அலுவலகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதை வீட்டிற்கு வந்தவுடனே மறக்க செய்துவிடுவாள் தன்னுடைய என் இன்முகத்தால்
அன்றும் அது போல தான் அலுவலகத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்
படைத்தலைவனை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவியை போல, வீட்டின் வாசலையே உற்று நோக்கி கொண்டிருக்கும் காவ்யா அன்று அங்கு இல்லை
சரி, ஏதோ வேலையாக இருப்பாள் என்று எண்ணி கொண்டான்
வீட்டின் உள்ளே அவன் எப்போதும் நுழைந்ததும் துண்டினை அவன் கையில் கொடுத்து முகம், கை, கால் கழுவி விட்டு உள்ளே வாங்க என்று அன்பு கட்டளையும் இன்று இல்லை
இவளுக்கு இன்று என்னவாகி விட்டது என்று வீடு முழுவதும் அவளை தேடினான், வீட்டின் மாடி, உற்றம் என அணைத்து இடங்களையும் தேடி கடைசியாக வீட்டின் பின் புறம் தேடினான்
வீட்டின் கிணற்றின் சுற்று சுவரின் மீது சாய்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள்
காவ்யாவின் முகத்தில் இருக்கும் அக்மார்க் புன்னகை அன்று இல்லை, மாறாக அவள் கன்னத்தில் உள்ள வடுக்கள் அவள் அழுததற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்தது
சரவணன் அவள் அருகில் சென்று அவள் தோலை பிடித்து உலுக்கினான்
எந்த வெளிப்பாடும் இல்லை அவளிடம்
"காவ்யா, காவ்யா"
என்று மீண்டும் ஒரு முறை அவள் பெயரினை கூறி அவளை அழைத்தான்
பின்பு அவளின் நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய்
" வந்துடீங்களா, எப்போ வந்தீங்க?"
என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்
" நான் வந்தது இருக்கட்டும், உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி இங்க வந்து தனியா உட்காந்திருக்க?"
" அது ஒன்னும் இல்லை, சும்மா தான்"
" உண்மையை சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு?"
" இல்லை என்னோட அம்மா நினைப்பாவே இருக்கு"
சரவணக்கு தெரியும் அவளுக்கு அவள் அம்மா என்றல் உயிர், பாவம் நாம் யார் மேல் அதிகம் அன்பு வைத்துள்ளோமோ அவர்களின் உயிரை தான்
கடவுள் மிகவும் சீக்கிரமாக எடுத்து கொள்கிறேன்
காவ்யாவிற்கு எப்படி சமாதனம் சொல்வது என்று தெரியவில்லை, இருப்பினும் தன் அன்பு அவளை சரிக்கட்டும் என்பதில் சரவணனுக்கு
சந்தேகமில்லை
அவளை வீட்டினுள் அழைத்து சென்று அவளை ஒரு வழியாக சமாதனம் செய்தான், அவளுக்கு தோசை ஊற்றி கொடுத்து, பின்பு பாத்திரங்களை கழுவி படுக்கை அறைக்கு வந்தான் பின்பு காவ்யாவின் தலையை தன்னுடைய மடி மேல் வைத்து தாயின் அரவணைப்பில் தூங்கும் குழந்தையை போல அவளை படுக்க வைத்து காவ்யாவை தூங்க வைத்த சந்தோஷத்தில் தானும் தூங்கினான்
ஆனால், காவ்யாவோ கண்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்தாள்
சரவணனை போல தான் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு கணவன் வரவேண்டும் என்று அணைத்து பெண்களும் நினைப்பார்கள்,
கடவுளோ அந்த கொடுப்பினையோ அனைவருக்கும் கொடுப்பதில்லை
இப்படிப்பட்ட கணவன் தனக்கு வாய்த்தது உண்மையில் தன்னுடைய அதிர்ஷ்டமே என்று எண்ணிக்கொண்டாள்
இப்படி அன்பாக இருக்கும் சரவணனிடம் உண்மையை சொல்லலாமா, வேண்டாமா என்று அவள் மனதில் ஓடும் போராட்டத்தினை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது
இப்படியான கடும் மன அழுத்தத்திலும் அவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை
மறுநாள் காலை சரவணனை அலுவலகம் அனுப்பிவிட்டு, தனது வழக்கமான வீட்டு வேலைகளை பார்க்க துவங்கினாள், ஹாலில் இருந்து தொலைபேசி
ஒழித்தது
அவளது மனம் படபக்க ஆரம்பித்தது, நேற்று வந்த அதே தொலைபேசி அழைப்பாக இருக்குமோ என்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டாள்
அதற்குள் தொலை பேசி நின்று விட்டது, நிம்மதி பேரு மூச்சு விட்டாள்
மீண்டும் தொலைபேசி ஒலித்தது இந்த முறை தொலைபேசியை எடுப்பதை தவிர அவளுக்கு வேறு வழி இல்லை, அப்போது அவளின் நினைவுகளுக்கு வந்தது தனது கைபேசி இரண்டு நாட்களாக வேலை செய்ய வில்லை என்று அதனால் ஒரு வேலை அவள் தந்தையாக இருக்குமோ என்று எண்ணினாள்
மெதுவாக தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்
தொலைபேசியை எடுத்து காதில் வைத்தவுடனே தெரிந்து விட்டது நேற்று அவள் கேட்ட அதே குரல் தான் என்று மறுமுனையில் அந்த குரலை மட்டும் கேட்டுகொண்டிருந்தாள் இவள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை
அழைப்பினை முழுமையாக கேட்டுவிட்டு சட்டென்று சரிந்து விழுந்தாள்,
அடுத்த நிமிடம் அவளுக்கு உலகமே நின்று விடும் போல இருந்தது
அன்று வழகதிற்காக மாறாக சரவணன் வெகு விரைவாக வீட்டிற்கு வந்தான்
வீட்டுக்குள் வந்தவனுக்கு காவ்யா இருக்கும் நிலைமை அவனை நிலை குலைய செய்தது
அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து காவ்யாவை எழுப்பினான்
"காவ்யா எழுந்திரிமா என்னாச்சு உடம்பு ஏதும் சரி இல்லையா, டாக்டர் கிட்ட போகலாமா? "
காவ்யா சரவணனின் மார்பில் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்து விட்டாள்
சரவணனுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் விளங்கவில்லை
" ஏதுவ இருந்தாலும் என்கிட்ட சொல்லுமா பரவாஇல்லை"
இதற்கு மேல் சரவனணிண்டம் இதை மறைப்பதில் காவ்யாவிற்கு விருப்பம் இல்லை
" குமாரை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க"
அவள் குமார் என்று கூறியவுடனே புரிந்து விட்டது அந்த குமார் என்று?
குமார் காவ்யாவின் முன்னால் காதலன், காவ்யாவின் வீட்டில் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்ட நேரத்தில் குமாரின் வீட்டில் உள்ளவர்கள் இதனை ஏற்று கொள்ளவில்லை
இரு வீட்டாரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்வதில் காவ்யாவிற்கு உடன்பாடு இல்லை, ஆதலால் குமாரை காவ்யா பிரிய நேரிட்டது
ஒரு வழியாக காவ்யாவின் பெற்றோர் காவ்யாவின் மனதை தேற்றி காவ்யாவிற்கு சரவணனை திருமணம் செய்து வைத்தனர்
இந்த விஷயம் சரவணனுக்கு திருமணத்திற்கு முன் தெரியாது, காவ்யா தங்களுடைய முதலிரவில் அனைவரையும் வெளிப்படையாக சொல்லிவிட்டாள் அதன் பின்னர் குமார் என்ற வார்த்தை அவள் வாழ்வில் குறுக்கிடவில்லை
" எப்படிமா அவருக்கு என்னாச்சு?"
" தெரியலைங்க"
" சரி நீ பொய் முகத்தை கழுவிட்டுவா நம்ம பொய் பார்த்துட்டு வரலாம்"
காவ்யாவிற்கு போவதா, வேண்டாமா என்று ஒரே குழப்பம் இறுதியாக
அவள் சரவணனுடன் கிளம்பினாள்
மருத்துவமனையில் சென்றவுடன் குமார் அனுமதிக்கபடிருக்கும் இடத்தினை கேட்டறிந்து சென்றனர்
காவ்யா, சரவணனையும் உள்ளே வருமாறு அழைத்தாள்
" இல்ல, வேண்டாம் டா இங்க தான் என்னோட நண்பர் ஒருத்தர் டாக்டரா இருக்கார் நான் அவரை பார்த்துட்டு, அப்படியே குமார் உடம்பு எப்படி இருக்குனு கேட்டுட்டு வரேன்"
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தினை விடு நகர்ந்தான்
காவ்யா உள்ளே நுழைய முயன்றாள்
" உள்ளே டாக்டர் இருக்காங்க, நீங்க கொஞ்ச நேரம் வெளில காத்திருங்க"
என்று கூறினார்கள்
வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள், அவளின் கை மேலே இன்னொரு பெண்ணின் கை ஆறுதல் படுத்தியது
காவ்யா திரும்பி யார் என்று நோக்கினாள், அது குமாரின் தங்கை தீபா
" அவருக்கு இப்போ எப்படி இருக்கு தீபா?"
" இல்லை அண்ணி, கொஞ்சம் கவலைக்கிடம்தான் என்று சொல்லினாள்"
காவ்யாவின் கண்களில் கண்ணீர் அரும்புவதை அவளால் நிறுத்தமுடியவில்லை
" அண்ணி, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?"
அவள் என்வென்று கண்களால் கேட்டாள்
" அண்ணி இத இந்த சமயத்துல சொல்லலாமான்னு தெரியல, இருந்தாலும் உங்க கிட்ட மறைக்க என் மனசு விரும்பல "
" நீ என்ன சொல்ற?"
" அதுவந்து அண்ணி, நீங்களும் எங்க அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க போறிங்கன்னு சொன்னவுடனே எங்க வீட்டுல எல்லோரும் சம்மதம் தான் சொன்னங்க, ஆனால் அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு எங்க அண்ணனே வந்து இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடுங்கனு சொன்னார்
எங்களுக்கு ஒண்ணுமே புரியல, சரி நீங்க ரெண்டு பெரும் எதாவது சண்ட போடிருப்பிங்கனு நினைச்சோம் அதுக்கு அப்புறம் ஒரு நாள் என்னோட அண்ணன் உங்களோட கல்யாண பத்திரிக்கையை வெச்சு பார்த்து அழுது கொண்டிருந்தான்"
" அப்போ அவன் கிட்ட கேட்டேன், என்ன ஆச்சு என் கல்யாணத்தை வேண்டாம்னு சொன்ன?"
" அப்போது தான் தனக்கு கேன்சர் இருப்பதாகவும், அதனால் தான் உங்களை கட்டிகொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தான்"
" பின்பு நாங்களும், எவ்வளவோ மருத்துவமனைக்கும் அவனை அழைத்து சென்றும் பலன் இல்லை"
" அவனின் இருந்தி நாட்களை அவன் எண்ணி கொண்டிருக்கிறான் என்று கூறினார்கள்"
" இதை உங்களிடம் கூறலாமே என்று எவ்வளவோ எடுத்து கூறியும் என்னுடைய அண்ணன் ஒத்துக்கொள்ளவில்லை, கடைசி வரை இதை உங்களிடம் கூற வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டான், ஆனால் என் மனது கேட்கவில்லை அதனால் தான் அனைத்தையும் உங்களிடம் கொட்டி தீர்த்தேன்"
"கடைசியாக என்னோட அண்ணன் என்கிட்ட கேட்ட ஒன்னு சாகறதுக்குள்ள உங்கள ஒரு முறை பார்க்கணும்கிறது தான்"
"இருந்தாலும் அவனோட ஆசையை எப்படி நிறைவேற்ற போறம்னு தெரியல,
உங்களோட சந்தோஷமான வாழ்கையை நான் குறுக்கிட விரும்பல அதே நேரத்துல மரண படுக்கைல இருக்கிற என் அண்ணனோட ஆசையை நிறைவேற்றலனா நான் மனுஷியே இல்லை"
"அதன் பின்பு தான் உங்களோட கணவர் சரவணனை தற்செயலாக சந்திச்சேன்
அவர்கிட நடந்த எல்லாத்தையும் சொன்னேன்"
" அவர் தான் உங்க வீட்டுக்கு போன் பண்ணி உங்ககிட்ட நேரடியா இதை சொல்ல சொன்னார், நான் என் சின்ன அண்ணன் விட்டு பேச சொன்னேன்"
" நீங்க இபோ இங்க வந்ததுக்கு நான் சரவணனுக்கு தான் நன்றி சொல்லணும்"
என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே டாக்டர்கள் வெளியில் சென்று விட நீங்கள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று கூறினார்கள்
காவ்யா கண்களை துடைத்து கொண்டே உள்ளே சென்றாள்
அங்கு குமார் மரணத்தின் பிடியில் போராடி கொண்டிருந்தான், காவ்யாவை கண்டவுடன் குமாரின் கண்கள் கண்ணீர் மிதந்தது இருவரும் பேசிக்கொள்ளவில்லை மாறாக இருவரின் கண்களும் பேசிக்கொண்டிருந்தது
காவ்யா குமாரின் கைகளை எடுத்து தான் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டாள், காவ்யாவின் கண்ணீர் துளிகள் குமாரின் கைகளில் பட்டது
அந்த தருணத்தில் குமாரின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது, வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சரவணனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
முற்றும்.
Wednesday, February 15, 2012
சிரிப்பதா, அழுவதா??
சிரிப்பதா, அழுவதா??
என்னை அவள் வெறுக்கிறாள்
என்று தெரிந்து கொண்டேன்
நான் கொடுத்த காதல் கடிதங்களை
என் முகத்தில் அவள் தூக்கி
எறிந்தபோது??
பள்ளியில் என்னை ஆசிரியர்
மற்றவர்கள் முன்னிலையில்
வீட்டு பாடங்களை கேட்டது
அவமானம் என்று கருதி அதன் பின்பு
பள்ளிக்கு செல்லாத நான்
இன்று இதனை பேர் முன்னிலையில்
என்னை வேண்டாம்,
என்னை தொந்தரவு செய்யாதே
என கூறியும் அவள் பின்னால்
நாய் போல திரியும் இந்த மனதை
நான் என்ன வென்று சொல்வேன்
கைபேசியில் குறுஞ்செய்தி சத்தம்
கேட்டவுடன் அவள் ஏதும் செய்தி
அனுப்பி இருப்பாளோ?
என்று என்னை நானே ஏமாற்றி
கொள்ளும் இந்த காதலை என்னவென்று
சொல்வேன்
இறுதியாக நான் காத்திருந்த அந்த
நாளும் வந்தது என்னவளிடம்
அழைப்பு வந்தது
மனம் எண்ணில் அடங்க கற்பனைகளோடு
அவளிடம் பேசினேன் அப்போது
அவள் தான் தெரிந்தது என் மீது
பாசத்தோடு அவள் என்னை அழைக்கவில்லை
அவளின் திருமண தேதியை என்னிடம்
தெரிவிக்க என்று
சிரிப்பதா, அழுவதா???
Thursday, February 9, 2012
முதல் வரி! முதல் பிழை!! -2
பாகம் 1 -http://kangalumkavipaduthe.blogspot.in/2011/10/blog-post.html
அவளை தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரி மணி
ஒழித்தது
இதற்கு மேல் அவளை தேடி கொண்டிருப்பதில் எந்த விதமான உபயோகமும்
இல்லை என்பதனை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தேன்
அந்த பெண்ணை இப்படி தவற விட்டுவிட்டோமே, என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நின்றது இருப்பினும் நம் கல்லூரியில் தானே படிக்கிறாள்
அப்புறமாக பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்
அவளை சந்தித்ததின் ராசியோ என்னமோ தெரியவில்லை, எப்போதுமே
வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் வரும் சறுக்கு மரம் அன்று ஏனோ
வரவில்லை
எல்லாம் அந்த பெண்ணை சந்தித்ததின் மகிமை என நினைத்து கொண்டேன்
பள்ளி முடிந்த நண்பர்களோடு வீடு வந்து சேர்ந்தேன், எப்போதும் நான்
சுதாவுடன் வருவது தான் வழக்கம் அன்று வேறு வழி இல்லாததால்
அவர்களோடு வந்தேன்
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சுதாவை சந்திக்க சென்றேன்,
அங்கு அவள் அம்மாவிடம் அவள் எங்கே என்று வினவ இன்று கல்லூரி
செல்லாத காரணத்தால் இன்றைய பாடங்களை தெரிந்து கொள்வதற்காக
அவள் தோழி வீட்டிற்கு இப்போது தான் சென்று உள்ளதாக கூறினார்கள்
நானும் அப்புறமாய் சந்தித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, என் நண்பர்களோடு வெளியில் சென்று விட்டேன்
நாங்கள் அனைவரும் கல்லூரி முடிந்ததும், நாங்கள் வழக்கமாக
சந்திக்கும் இடமான பொட்டிக்கடையில் ஆஜரகிவிட்டோம்
அந்த கடை எங்கள் வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடை தான்,
அந்த கடையை நாங்கள் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் அந்த பகுதியில்
என் தந்தை அடிக்கடி வரமாட்டார், நிம்மதியாக சிகரட் பிடிக்கலாம்
என்று தான்
சிகரட்டை வாயில் பற்றவைத்து எமனை உள்ளே இழுத்து, வெளியே விட்டு கொண்டிருந்தேன்
அந்த நேரம் என் நண்பன் அருகில் இருந்து சைகை தர என் தந்தை தான் வந்து
விட்டாரோ என பதறி அடித்து சிகரட்டை காலில் போட்டு மிதித்து
வாயில் உள்ள புகையை அந்த பக்கம் திரும்பி ஊதி விட்டு திரும்பினேன்
அந்த பக்கம் திரும்பி பார்த்தாள் சுதா வந்து கொண்டிருந்தாள்,
இவளுக்காகவா இதை கீழே போட்டோம் அவளுக்கு தான் நான் புகை
பிடிப்பேன் என்று நன்கு தெரியுமே!!
அவள் அருகில் யாரோ வருவது போல தெரிந்தது, ஒரு வேளை அவள் தங்கையாக இருக்குமோ என எண்ணி அவளுடன் வருவது யார் என்று உற்று நோக்கினேன்,
அப்போது தான் தெரிந்தது என்னை இடித்து விட்டு என்னை கடந்து சென்ற அந்த தேவதையே தான் இவள் எப்படி சுதாவுடன் வருகிறாள் என்று எண்ணி கொண்டேன்
ஒரு வேளை சுதாவின் தோழியாக இருப்பாளோ?
இல்லையே சுதாவின் தோழிகள் அனைவரையும் நான் நன்கு அறிவேன்
இருப்பினும் இவளுக்கும், சுதாவிற்கும் என்ன சம்மந்தம் இருக்க போகிறது
என்று யோசித்து கொண்டிருந்தேன்
இந்த நேரத்தில் அவர்கள் நாங்கள் நின்ற இடத்தினை விட்டு கடந்து
சென்றார்கள்
என் நண்பர்களிடம் நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு
உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்
சீக்கிரம் போ, இல்லைனா சுதா உங்கள் வீட்டுல சிகரட் விஷயத்தை போட்டு
கொடுத்திடபோற என என் நண்பர்கள் பேசுவது என் காதுகளில் நன்கு விழுந்தது
அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு மாயமாய் மறைந்தேன்
வந்ததும் என் வீட்டிற்கு கூட செல்லாமல், சுதா வீட்டினை நோக்கி
நகர்ந்தேன்
அவள் ஏதோ கணினியில் நொண்டி கொண்டிருந்தாள்,
" வாடா, இன்னைக்கு என்ன கிளாஸ்-க்கு வெளில நிக்க வச்சுட்டார
சறுக்கு மரம்?"
" இல்லை இன்னைக்கு, அவர் வரல தப்பிச்சுட்டேன், அத விடு
அப்போ உன் கூட வந்தால ஒருத்தி யார் அவ"
" நீ யார கேக்குற"
" சாயந்திரம் நான் போட்டி கடையில சிகரட் அடிக்கும் போது, உன் கூட
வந்தால அவ யாரு"
" நீ ஸ்வேதாவ, கேக்குறியா'
" அது யாருன்னு தெரியாம தான் உன் கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்
பின்னே எனக்கு எப்படி எப்படி தெரியும் அவ ஸ்வேதாவ, மாலாவன்னு?"
" சரி, இப்போ நீ எதுக்கு அவளை பத்தி விசாரிக்குற"
" அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?"
"முன்னாடியே தெரிஞ்சிருந்த நான் ஏன் உன் கிட்ட வந்து கேட்க போறேன்,
அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் உன் கிட்ட வந்து கேக்குறேன்"
" அவளை பத்தி நீ எதுக்கு தெரிஞ்சுக்கணும் என்னப்பா, அவளை லவ் பன்றியா?"
" அப்படி எல்லாம் இல்லை"
" சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான், மத்த படி நீ நெனைக்கிற மாதிரி எதுவும்
இல்லை"
என்று அவன் உதடுகள் தான் கூறியதே தவிர, அவன் சொல்வது பொய் பொய் என்பதனை உணர்திக்கொண்டிருந்தது அவனது கண்கள் இதை சுதா
கவனிக்க தவறவில்லை
அவளை பற்றி தனக்கு தெரிந்த எல்லா தகவல்களையும்,
அவனிடம் அவள் கூறினாள் அதன் பின்னர் தான் தெரிந்தது அவள்
தன்னுடைய கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்று
அவள் இது நாள் வரை நடந்த பாடங்களை, சுதாவிடம் கேட்டு தெரிந்து
கொள்வதற்காக அவள் தனது வீட்டிற்கு வரும் படி அழைத்து கொண்டதால்
தான் சென்றதாகவும் சுதா தெரிவித்தாள்
அவளிடம் எப்படி அறிமுகமாவது என யோசித்து கொண்டிருந்தேன்,
சுதாவிடமே கேட்டு விடலாமா என யோசித்தேன், என்னால் அவர்கள் நட்பு
பாலகி விட கூடாது என எண்ணி அவளிடம் கேட்க எனக்கு மனம் வரவில்லை
சரி, எனது நண்பர்கள் யாரிடவது கேட்கலாம் என்றால்
நீயும் அந்த நோய்ல மாடிகிட்டாய?
என என்னை கலாய்ப்பார்கள் என்று அவர்களிடம் கேட்காமல் விட்டுவிட்டேன்
நாளை காலை அவளை சந்திக்க போகிறோம் என்ற எண்ணமே அந்த இரவை நித்திரை இல்லாமல் நீண்ட இரவாக விடிய செய்தது
காதல் ஒரு பைத்தியகாரத்தனம் என்று எண்ணி கொண்டிருந்தேன்,
என்னை அவளது மின்னல் கண்கள் தாக்கும் வரையில்
வழக்கத்தை விட அதிக நேரம் குளித்து, அழகாக நல்ல உடையினை
உடுத்திக்கொண்டு கல்லூரிக்கு சீக்கிரமே கிளம்பினேன்
ஒருவேளை அவள் எனக்கு முன்னதாகவே வந்து விட்டால், என்ற எண்ணம் தான் நான் சீக்கிரமே கிளம்பவைத்தது
அப்போது நான் வெளியில் வரவும் சுதா வீட்டில் இருந்து தனது தந்தையுடன் கிளம்பி கொண்டிருந்தாள்
அவர் தந்தைக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு சிட்டாக கிளம்பி கல்லூரிக்கு பறந்தேன்
காலை 8 .30 கல்லூரி எப்படி இருக்கும் என்று, அன்று தான் முதல் முறையாக
கண்டேன்
எப்போதும் சல சல வென இருக்கும் மெயின் பிளாக் அமைதியாக இருந்தது,
அங்கே சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்
அப்போது அந்த பக்கம் இருந்த அறிவிப்பு பலகையை உற்று நோக்கினேன், கல்லூரியை பற்றி சில அறிவிப்புகள் இருந்தது
அவள் வரும் வரை இதையாவது படிக்கலாம் என்று ஒவ்வொன்றாக
படித்து கொண்டிருந்தேன்
கல்லூரி நிர்வாகம் சார்பாக ஒரு அறிவிப்பு இருந்தது....
தேடல் தொடரும்...
அவளை தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரி மணி
ஒழித்தது
இதற்கு மேல் அவளை தேடி கொண்டிருப்பதில் எந்த விதமான உபயோகமும்
இல்லை என்பதனை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தேன்
அந்த பெண்ணை இப்படி தவற விட்டுவிட்டோமே, என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நின்றது இருப்பினும் நம் கல்லூரியில் தானே படிக்கிறாள்
அப்புறமாக பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்
அவளை சந்தித்ததின் ராசியோ என்னமோ தெரியவில்லை, எப்போதுமே
வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் வரும் சறுக்கு மரம் அன்று ஏனோ
வரவில்லை
எல்லாம் அந்த பெண்ணை சந்தித்ததின் மகிமை என நினைத்து கொண்டேன்
பள்ளி முடிந்த நண்பர்களோடு வீடு வந்து சேர்ந்தேன், எப்போதும் நான்
சுதாவுடன் வருவது தான் வழக்கம் அன்று வேறு வழி இல்லாததால்
அவர்களோடு வந்தேன்
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சுதாவை சந்திக்க சென்றேன்,
அங்கு அவள் அம்மாவிடம் அவள் எங்கே என்று வினவ இன்று கல்லூரி
செல்லாத காரணத்தால் இன்றைய பாடங்களை தெரிந்து கொள்வதற்காக
அவள் தோழி வீட்டிற்கு இப்போது தான் சென்று உள்ளதாக கூறினார்கள்
நானும் அப்புறமாய் சந்தித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, என் நண்பர்களோடு வெளியில் சென்று விட்டேன்
நாங்கள் அனைவரும் கல்லூரி முடிந்ததும், நாங்கள் வழக்கமாக
சந்திக்கும் இடமான பொட்டிக்கடையில் ஆஜரகிவிட்டோம்
அந்த கடை எங்கள் வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடை தான்,
அந்த கடையை நாங்கள் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் அந்த பகுதியில்
என் தந்தை அடிக்கடி வரமாட்டார், நிம்மதியாக சிகரட் பிடிக்கலாம்
என்று தான்
சிகரட்டை வாயில் பற்றவைத்து எமனை உள்ளே இழுத்து, வெளியே விட்டு கொண்டிருந்தேன்
அந்த நேரம் என் நண்பன் அருகில் இருந்து சைகை தர என் தந்தை தான் வந்து
விட்டாரோ என பதறி அடித்து சிகரட்டை காலில் போட்டு மிதித்து
வாயில் உள்ள புகையை அந்த பக்கம் திரும்பி ஊதி விட்டு திரும்பினேன்
அந்த பக்கம் திரும்பி பார்த்தாள் சுதா வந்து கொண்டிருந்தாள்,
இவளுக்காகவா இதை கீழே போட்டோம் அவளுக்கு தான் நான் புகை
பிடிப்பேன் என்று நன்கு தெரியுமே!!
அவள் அருகில் யாரோ வருவது போல தெரிந்தது, ஒரு வேளை அவள் தங்கையாக இருக்குமோ என எண்ணி அவளுடன் வருவது யார் என்று உற்று நோக்கினேன்,
அப்போது தான் தெரிந்தது என்னை இடித்து விட்டு என்னை கடந்து சென்ற அந்த தேவதையே தான் இவள் எப்படி சுதாவுடன் வருகிறாள் என்று எண்ணி கொண்டேன்
ஒரு வேளை சுதாவின் தோழியாக இருப்பாளோ?
இல்லையே சுதாவின் தோழிகள் அனைவரையும் நான் நன்கு அறிவேன்
இருப்பினும் இவளுக்கும், சுதாவிற்கும் என்ன சம்மந்தம் இருக்க போகிறது
என்று யோசித்து கொண்டிருந்தேன்
இந்த நேரத்தில் அவர்கள் நாங்கள் நின்ற இடத்தினை விட்டு கடந்து
சென்றார்கள்
என் நண்பர்களிடம் நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு
உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்
சீக்கிரம் போ, இல்லைனா சுதா உங்கள் வீட்டுல சிகரட் விஷயத்தை போட்டு
கொடுத்திடபோற என என் நண்பர்கள் பேசுவது என் காதுகளில் நன்கு விழுந்தது
அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு மாயமாய் மறைந்தேன்
வந்ததும் என் வீட்டிற்கு கூட செல்லாமல், சுதா வீட்டினை நோக்கி
நகர்ந்தேன்
அவள் ஏதோ கணினியில் நொண்டி கொண்டிருந்தாள்,
" வாடா, இன்னைக்கு என்ன கிளாஸ்-க்கு வெளில நிக்க வச்சுட்டார
சறுக்கு மரம்?"
" இல்லை இன்னைக்கு, அவர் வரல தப்பிச்சுட்டேன், அத விடு
அப்போ உன் கூட வந்தால ஒருத்தி யார் அவ"
" நீ யார கேக்குற"
" சாயந்திரம் நான் போட்டி கடையில சிகரட் அடிக்கும் போது, உன் கூட
வந்தால அவ யாரு"
" நீ ஸ்வேதாவ, கேக்குறியா'
" அது யாருன்னு தெரியாம தான் உன் கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்
பின்னே எனக்கு எப்படி எப்படி தெரியும் அவ ஸ்வேதாவ, மாலாவன்னு?"
" சரி, இப்போ நீ எதுக்கு அவளை பத்தி விசாரிக்குற"
" அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?"
"முன்னாடியே தெரிஞ்சிருந்த நான் ஏன் உன் கிட்ட வந்து கேட்க போறேன்,
அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் உன் கிட்ட வந்து கேக்குறேன்"
" அவளை பத்தி நீ எதுக்கு தெரிஞ்சுக்கணும் என்னப்பா, அவளை லவ் பன்றியா?"
" அப்படி எல்லாம் இல்லை"
" சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான், மத்த படி நீ நெனைக்கிற மாதிரி எதுவும்
இல்லை"
என்று அவன் உதடுகள் தான் கூறியதே தவிர, அவன் சொல்வது பொய் பொய் என்பதனை உணர்திக்கொண்டிருந்தது அவனது கண்கள் இதை சுதா
கவனிக்க தவறவில்லை
அவளை பற்றி தனக்கு தெரிந்த எல்லா தகவல்களையும்,
அவனிடம் அவள் கூறினாள் அதன் பின்னர் தான் தெரிந்தது அவள்
தன்னுடைய கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்று
அவள் இது நாள் வரை நடந்த பாடங்களை, சுதாவிடம் கேட்டு தெரிந்து
கொள்வதற்காக அவள் தனது வீட்டிற்கு வரும் படி அழைத்து கொண்டதால்
தான் சென்றதாகவும் சுதா தெரிவித்தாள்
அவளிடம் எப்படி அறிமுகமாவது என யோசித்து கொண்டிருந்தேன்,
சுதாவிடமே கேட்டு விடலாமா என யோசித்தேன், என்னால் அவர்கள் நட்பு
பாலகி விட கூடாது என எண்ணி அவளிடம் கேட்க எனக்கு மனம் வரவில்லை
சரி, எனது நண்பர்கள் யாரிடவது கேட்கலாம் என்றால்
நீயும் அந்த நோய்ல மாடிகிட்டாய?
என என்னை கலாய்ப்பார்கள் என்று அவர்களிடம் கேட்காமல் விட்டுவிட்டேன்
நாளை காலை அவளை சந்திக்க போகிறோம் என்ற எண்ணமே அந்த இரவை நித்திரை இல்லாமல் நீண்ட இரவாக விடிய செய்தது
காதல் ஒரு பைத்தியகாரத்தனம் என்று எண்ணி கொண்டிருந்தேன்,
என்னை அவளது மின்னல் கண்கள் தாக்கும் வரையில்
வழக்கத்தை விட அதிக நேரம் குளித்து, அழகாக நல்ல உடையினை
உடுத்திக்கொண்டு கல்லூரிக்கு சீக்கிரமே கிளம்பினேன்
ஒருவேளை அவள் எனக்கு முன்னதாகவே வந்து விட்டால், என்ற எண்ணம் தான் நான் சீக்கிரமே கிளம்பவைத்தது
அப்போது நான் வெளியில் வரவும் சுதா வீட்டில் இருந்து தனது தந்தையுடன் கிளம்பி கொண்டிருந்தாள்
அவர் தந்தைக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு சிட்டாக கிளம்பி கல்லூரிக்கு பறந்தேன்
காலை 8 .30 கல்லூரி எப்படி இருக்கும் என்று, அன்று தான் முதல் முறையாக
கண்டேன்
எப்போதும் சல சல வென இருக்கும் மெயின் பிளாக் அமைதியாக இருந்தது,
அங்கே சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்
அப்போது அந்த பக்கம் இருந்த அறிவிப்பு பலகையை உற்று நோக்கினேன், கல்லூரியை பற்றி சில அறிவிப்புகள் இருந்தது
அவள் வரும் வரை இதையாவது படிக்கலாம் என்று ஒவ்வொன்றாக
படித்து கொண்டிருந்தேன்
கல்லூரி நிர்வாகம் சார்பாக ஒரு அறிவிப்பு இருந்தது....
தேடல் தொடரும்...
Saturday, February 4, 2012
காதலர் தினம்
ஆம் கூறினார்கள் காதலர் தினம்
வெகு விரைவில் வரப்போகிறது என்று
தாய் தந்தையின் பிறந்த தேதி தெரியாத
இந்த மடையர்கள்!!!
வெட்கி தலைகுனி இப்படி ஒரு நாளை
நீ கொண்டாடுவதற்காக
நான் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை
காதலின் பெயரை கெடுப்பவர்களை
தான் குறை கூறுகிறேன்
இன்று உன்னுடன் இருக்கும் ஒருத்திக்காக
காதலர் தினத்தை கொண்டாடதே
இன்று உன்னுடன் இருக்கும் அந்த காதலி
நாளை அவள் கணவனுடன் கொண்டாடுவாள்,
நீ உன் மனைவியுடன் கொண்டாடுவாய் ....
அவனும் மனிதன் தானே - 2 பாகம்
முந்தைய பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
http://kangalumkavipaduthe.blogspot.in/2012/02/blog-post.html
சந்துரு அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தவன் போல அலைந்து
http://kangalumkavipaduthe.blogspot.in/2012/02/blog-post.html
சந்துரு அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தவன் போல அலைந்து
கொண்டிருந்தான், கடைசியாக அந்த பெரியவரை மருத்துவமனைக்கு
சென்று பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தான்
அவரை எந்த மருத்துவமனையில் அனுமதித்து இருகிறார்கள் என்று
ஒரு வழியாக அந்த மருத்துவமனையை வந்தடைந்தான்
" மேடம், இன்னைக்கு காலையில அசோக் பில்லர் சிக்னல் கிட்ட அடிபட்டவர
இங்க தான் சேர்த்து இருக்காங்க அவர் எந்த வார்டு மேடம்"
"பெயரை சொல்லுங்க சார், இன்னைக்கு மட்டும் காலையில 3 அடிபட்ட
கேஸ் வந்திருக்கு"
"அவர் பெயர் தெரியலை?"
"பெயர் தெரியாம நான் என்ன சார் பண்ண முடியும்"
"இல்ல மேடம், அவருக்கு ஒரு 45லிருந்து 50 வயசு இருக்கும், காலையில
பஸ்ல இருந்து கீழ விழுந்து அடிபட்டுட்டார்"
"ஓ! அந்த கேசா, ராம கிருஷ்ணன் அவர் மதியமே இறந்துட்டார்"
எனக்கு தூக்கி வாரி போட்டது
"பிரேத பரிசோதனை, கட்டிடத்திற்கு போங்க"
" நன்றி மேடம்"
பிரேத பரிசோதனை கட்டிடத்திற்கு ஒரு வழியாக வந்தடைந்தேன்,
அந்த இடமெங்கும் ஒரே அழுகை சத்தம், அங்கு நின்று கொண்டிருந்த
அனைவரின் முகத்திலும் இழக்க கூடாததை இழந்து தவிக்கின்ற தவிப்பு
தெரிந்தது
நான் அருகில் இருந்த கடையில் நின்று கொண்டிருந்தேன்,
மெதுவாக அந்த டீக்கடை காரரிடம் பேச்சுகொடுத்தேன்
"என கேஸ் தலைவா"
"பெருசு ஒன்னு, பஸ்ல இருந்து விழுந்து மண்டைய போட்டுடுச்சு"
அப்போது அருகில் இருந்த சிலர் பேசுவது என் காதில் விழுந்தது
"அவர் மகன் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தா, இந்நேரம்
பிளைசிருப்பர்"
"பாவம் நல்ல மனுஷன், இவருக்கு இவன் மகன் தான் எமனா இருக்கணும்னு
விதி இருந்திருக்கு அத யாரால மாத்த முடியும்"
பிணவறையின் ஒரு ஓரத்தில் , அவர் மகன் குத்துக்கல் ஆட்டம்
நின்று கொண்டிருந்தான், அவன் கண்களில் அவன் தந்தை இறந்ததற்கான
எந்த ஒரு அறிகுறியும் இல்லை
தன்னால் தான் தான் தந்தை இறந்தார் என்பதற்கான ஒரு உள்ளுணர்வோ,
உறுத்தலோ இல்லை இதற்கும் மேல் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை
இப்படியா மனம் கல்லாகி விட்டது இந்த மனிதனுக்கு???
அந்த மனிதரின் உடல் வெளியில் கொண்டு வரப்பட்டு அமரர் ஊர்தியில்
ஏற்றப்பட்டது
(எவ்வளோ பெரிய மனிதனாக இருந்தாலும் எவ்வளோ விலை மதிக்க
முடியாத அளவுக்கு செல்வங்கள், வாகனங்கள் வைத்திருந்தாலும் அவரின் கடைசி வண்டி இந்த ஊர்வலம் போல தான் இருக்கும் போல)
அவரின் மனைவி, மகள் அழுவதை பார்த்தல் கல் மனதையும் கரைத்து விடும்
காட்சி அது
என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,
காலையில் சந்தித்த ஒரு மனிதருக்காக கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை என அன்று தெரிந்து கொண்டேன்
அவரது உடலை வண்டியில் ஏற்றி விட்டு அதற்கான பணத்தை
அந்த பெண்மணியிடம் பெற்று கொண்டனர், அவர் இருக்கும் இந்த
நிலைமையில் எப்படி தான் அவர்களுக்கு பணம் வாங்க மனம் வருகிறதோ
என்று எனக்கு தெரியவில்லை
அது சரி, இறப்பு என்பது நமக்கு வலி
ஆனால், அது அவர்களுக்கு தொழில்
இப்படி ஒரு நாளைக்கு எத்தனை பெயரை பார்ப்பார்கள் என்று மனம்
நினைத்துக்கொண்டது
அந்த நேரத்தில் எனது அழைப்பு மணி ஒலித்தது,
எனது அம்மா தான் அழைத்திருந்தார்கள்
"சொல்லுங்கமா'
"எங்கடா இருக்க, ஆபீஸ் முடிஞ்சதா இல்லையா இன்னும் ஆபீஸ்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க"
பதில் சொல்வதற்கு முன்னாடியே , அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தார்கள், உண்மையை சொன்னால் பிரச்சனை தான் என்று
உணர்ந்து
"இதோ கிளம்பிட்டேன், இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்று சொல்லிக்கொண்டே"
அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்தேன்
இரவு தாமதமாக தான் வீட்டுக்கு சென்றேன்
அம்மா ஆர்வமாக டி.வி பார்த்து கொண்டிருந்தாள் நான் வந்ததை கூட
கவனிக்க நேரமில்லாமல், இரும்புவது போல் பாவல செய்தேன்
"வந்துடீங்களா, பொய் வேலைக்காரிய சாப்ப்பாடு போடா சொல்லுங்க"
என்று என் தந்தை வந்துவிட்டதாக எண்ணி கூறினாள்
அப்போது தான் உணர்ந்தேன் வீட்டில் சீரியல் பார்க்கும் போது கணவன்
வந்தால் இந்த நிலைமை தான் என்று பட்டிமன்றம் ஒன்றில் கேட்டதாக
நியாபகம்
அது எவ்வளவு உண்மை என்று அன்று உணர்ந்தேன்
"அம்மா, நான் வந்தது கூட தெரியலையா அவ்வளோ ஆர்வமா
டிவி பார்த்துகிட்டு இருக்க"
"கோவிச்சுக்காதடா, இப்போதான் கவிதா வீட்டுக்கு வந்தா அதான் அவ
பேசுறத கேட்டுகிட்டே நேரம் போறதே தெரியல"
"யாருமா அது கவிதா, நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்தாங்க"
"டேய் நான் சொன்னது திருமதி செல்வமல வர்ற கவிதாடா"
கோவம் உச்சன் தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஏறியது
என்னை நானே கேட்டு கொண்டேன், எப்போது தான் இவர்கள்
திருந்துவார்களோ என்று
"சரி, போய் கை, கால் அலம்பிட்டுவா தோசை ஊத்தி வைக்குறேன்"
"அம்மா, நான் பொய் முதல்ல குளிசுட்டே வரேன்"
"என்னடா, இன்னைக்கு புதுசா குளிக்க இந்த நேரத்துல குளிக்க போற"
"இல்ல உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு அதான், குளிச்சுட்டு வரேன்"
"சரி போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா, நான் அடுப்படிக்கு போறேன்"
"ஹீட்டர் வேலை செய்யல மறந்துடாத"
"ம்ம், நியாபகம் இருக்கு"
குளித்துவிட்டு அம்மா சுட்டு தந்த தோசையை சாபிட்டுகொண்டு இருந்ததில்
எனக்கு அந்த நியாபகமே வரவே இல்லை
ஹால்-ல் உட்காந்து அம்மாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு அங்கேயே
உறங்கி விட்டேன்
அதன் பின் மறுநாள் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால்
அப்படியே சென்று விட்டது
இவ்வாறாக ஒரு மாதம் கடந்து விட்டது .....
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனக்கு ப்ரோமோசன், கார் என
என்னுடைய வாழ்கை தரத்தை இன்னும் ஒரு படி உயர்த்தி கொண்டேன்
நாளை காலை ஒரு இன்டர்வியூ அதை நான் தான் நடத்த வேண்டும்
என என்னுடைய முதலாளி உத்தரவு, எனக்கு இதில் அனுபவம் இல்லை
என்று சொன்ன போது கூட அவர் என்னை விடுவதாக இல்லை
அவர் எனக்கு உதவியாக அவரது செக்ரடேரி ஷீலா எனக்கு
உதவியாக இருப்பாள் என்று அவளை அனுப்புவதாக கூறினார்
நானும் தலையை ஆட்டி வைத்தேன்
இன்டர்வியூக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் என் மேஜை-ல்
இருந்தது அதில் ஒவ்வொரு பெயராக வாசிக்க தொடங்கினேன்
அதில் மொத்தம் 20 நபர்களின் பெயர்கள் இருந்தது,
12 பெண்கள் 8 ஆண்கள்
அப்போது எதாவது தெரிந்த பெயர் இருக்கிறதா என்று தேட துவங்கினேன்
தேடல் தொடரும்...
அவரை எந்த மருத்துவமனையில் அனுமதித்து இருகிறார்கள் என்று
ஒரு வழியாக அந்த மருத்துவமனையை வந்தடைந்தான்
" மேடம், இன்னைக்கு காலையில அசோக் பில்லர் சிக்னல் கிட்ட அடிபட்டவர
இங்க தான் சேர்த்து இருக்காங்க அவர் எந்த வார்டு மேடம்"
"பெயரை சொல்லுங்க சார், இன்னைக்கு மட்டும் காலையில 3 அடிபட்ட
கேஸ் வந்திருக்கு"
"அவர் பெயர் தெரியலை?"
"பெயர் தெரியாம நான் என்ன சார் பண்ண முடியும்"
"இல்ல மேடம், அவருக்கு ஒரு 45லிருந்து 50 வயசு இருக்கும், காலையில
பஸ்ல இருந்து கீழ விழுந்து அடிபட்டுட்டார்"
"ஓ! அந்த கேசா, ராம கிருஷ்ணன் அவர் மதியமே இறந்துட்டார்"
எனக்கு தூக்கி வாரி போட்டது
"பிரேத பரிசோதனை, கட்டிடத்திற்கு போங்க"
" நன்றி மேடம்"
பிரேத பரிசோதனை கட்டிடத்திற்கு ஒரு வழியாக வந்தடைந்தேன்,
அந்த இடமெங்கும் ஒரே அழுகை சத்தம், அங்கு நின்று கொண்டிருந்த
அனைவரின் முகத்திலும் இழக்க கூடாததை இழந்து தவிக்கின்ற தவிப்பு
தெரிந்தது
நான் அருகில் இருந்த கடையில் நின்று கொண்டிருந்தேன்,
மெதுவாக அந்த டீக்கடை காரரிடம் பேச்சுகொடுத்தேன்
"என கேஸ் தலைவா"
"பெருசு ஒன்னு, பஸ்ல இருந்து விழுந்து மண்டைய போட்டுடுச்சு"
அப்போது அருகில் இருந்த சிலர் பேசுவது என் காதில் விழுந்தது
"அவர் மகன் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தா, இந்நேரம்
பிளைசிருப்பர்"
"பாவம் நல்ல மனுஷன், இவருக்கு இவன் மகன் தான் எமனா இருக்கணும்னு
விதி இருந்திருக்கு அத யாரால மாத்த முடியும்"
பிணவறையின் ஒரு ஓரத்தில் , அவர் மகன் குத்துக்கல் ஆட்டம்
நின்று கொண்டிருந்தான், அவன் கண்களில் அவன் தந்தை இறந்ததற்கான
எந்த ஒரு அறிகுறியும் இல்லை
தன்னால் தான் தான் தந்தை இறந்தார் என்பதற்கான ஒரு உள்ளுணர்வோ,
உறுத்தலோ இல்லை இதற்கும் மேல் அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை
இப்படியா மனம் கல்லாகி விட்டது இந்த மனிதனுக்கு???
அந்த மனிதரின் உடல் வெளியில் கொண்டு வரப்பட்டு அமரர் ஊர்தியில்
ஏற்றப்பட்டது
(எவ்வளோ பெரிய மனிதனாக இருந்தாலும் எவ்வளோ விலை மதிக்க
முடியாத அளவுக்கு செல்வங்கள், வாகனங்கள் வைத்திருந்தாலும் அவரின் கடைசி வண்டி இந்த ஊர்வலம் போல தான் இருக்கும் போல)
அவரின் மனைவி, மகள் அழுவதை பார்த்தல் கல் மனதையும் கரைத்து விடும்
காட்சி அது
என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,
காலையில் சந்தித்த ஒரு மனிதருக்காக கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை என அன்று தெரிந்து கொண்டேன்
அவரது உடலை வண்டியில் ஏற்றி விட்டு அதற்கான பணத்தை
அந்த பெண்மணியிடம் பெற்று கொண்டனர், அவர் இருக்கும் இந்த
நிலைமையில் எப்படி தான் அவர்களுக்கு பணம் வாங்க மனம் வருகிறதோ
என்று எனக்கு தெரியவில்லை
அது சரி, இறப்பு என்பது நமக்கு வலி
ஆனால், அது அவர்களுக்கு தொழில்
இப்படி ஒரு நாளைக்கு எத்தனை பெயரை பார்ப்பார்கள் என்று மனம்
நினைத்துக்கொண்டது
அந்த நேரத்தில் எனது அழைப்பு மணி ஒலித்தது,
எனது அம்மா தான் அழைத்திருந்தார்கள்
"சொல்லுங்கமா'
"எங்கடா இருக்க, ஆபீஸ் முடிஞ்சதா இல்லையா இன்னும் ஆபீஸ்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்க"
பதில் சொல்வதற்கு முன்னாடியே , அடுத்தடுத்த கேள்விகளை தொடுத்தார்கள், உண்மையை சொன்னால் பிரச்சனை தான் என்று
உணர்ந்து
"இதோ கிளம்பிட்டேன், இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்று சொல்லிக்கொண்டே"
அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்தேன்
இரவு தாமதமாக தான் வீட்டுக்கு சென்றேன்
அம்மா ஆர்வமாக டி.வி பார்த்து கொண்டிருந்தாள் நான் வந்ததை கூட
கவனிக்க நேரமில்லாமல், இரும்புவது போல் பாவல செய்தேன்
"வந்துடீங்களா, பொய் வேலைக்காரிய சாப்ப்பாடு போடா சொல்லுங்க"
என்று என் தந்தை வந்துவிட்டதாக எண்ணி கூறினாள்
அப்போது தான் உணர்ந்தேன் வீட்டில் சீரியல் பார்க்கும் போது கணவன்
வந்தால் இந்த நிலைமை தான் என்று பட்டிமன்றம் ஒன்றில் கேட்டதாக
நியாபகம்
அது எவ்வளவு உண்மை என்று அன்று உணர்ந்தேன்
"அம்மா, நான் வந்தது கூட தெரியலையா அவ்வளோ ஆர்வமா
டிவி பார்த்துகிட்டு இருக்க"
"கோவிச்சுக்காதடா, இப்போதான் கவிதா வீட்டுக்கு வந்தா அதான் அவ
பேசுறத கேட்டுகிட்டே நேரம் போறதே தெரியல"
"யாருமா அது கவிதா, நம்ம வீட்டுக்கு எதுக்கு வந்தாங்க"
"டேய் நான் சொன்னது திருமதி செல்வமல வர்ற கவிதாடா"
கோவம் உச்சன் தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஏறியது
என்னை நானே கேட்டு கொண்டேன், எப்போது தான் இவர்கள்
திருந்துவார்களோ என்று
"சரி, போய் கை, கால் அலம்பிட்டுவா தோசை ஊத்தி வைக்குறேன்"
"அம்மா, நான் பொய் முதல்ல குளிசுட்டே வரேன்"
"என்னடா, இன்னைக்கு புதுசா குளிக்க இந்த நேரத்துல குளிக்க போற"
"இல்ல உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு அதான், குளிச்சுட்டு வரேன்"
"சரி போய் குளிச்சிட்டு சீக்கிரம் வா, நான் அடுப்படிக்கு போறேன்"
"ஹீட்டர் வேலை செய்யல மறந்துடாத"
"ம்ம், நியாபகம் இருக்கு"
குளித்துவிட்டு அம்மா சுட்டு தந்த தோசையை சாபிட்டுகொண்டு இருந்ததில்
எனக்கு அந்த நியாபகமே வரவே இல்லை
ஹால்-ல் உட்காந்து அம்மாவுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு அங்கேயே
உறங்கி விட்டேன்
அதன் பின் மறுநாள் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால்
அப்படியே சென்று விட்டது
இவ்வாறாக ஒரு மாதம் கடந்து விட்டது .....
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எனக்கு ப்ரோமோசன், கார் என
என்னுடைய வாழ்கை தரத்தை இன்னும் ஒரு படி உயர்த்தி கொண்டேன்
நாளை காலை ஒரு இன்டர்வியூ அதை நான் தான் நடத்த வேண்டும்
என என்னுடைய முதலாளி உத்தரவு, எனக்கு இதில் அனுபவம் இல்லை
என்று சொன்ன போது கூட அவர் என்னை விடுவதாக இல்லை
அவர் எனக்கு உதவியாக அவரது செக்ரடேரி ஷீலா எனக்கு
உதவியாக இருப்பாள் என்று அவளை அனுப்புவதாக கூறினார்
நானும் தலையை ஆட்டி வைத்தேன்
இன்டர்வியூக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் என் மேஜை-ல்
இருந்தது அதில் ஒவ்வொரு பெயராக வாசிக்க தொடங்கினேன்
அதில் மொத்தம் 20 நபர்களின் பெயர்கள் இருந்தது,
12 பெண்கள் 8 ஆண்கள்
அப்போது எதாவது தெரிந்த பெயர் இருக்கிறதா என்று தேட துவங்கினேன்
தேடல் தொடரும்...
அவனும் மனிதன் தானே - 1 பாகம்
பன்முகம் கொண்ட மனிதர்கள் இந்த சென்னையில் இருகிறார்கள்
அவர்கள் எல்லோரிடமும் நாம் பேசியதோ பழகியதோ இல்லை,
அவ்வாறு இரு வெவ்வேறு முகம் கொண்ட சென்னை வாசிகளின் கதை இது,
மணி காலை 6
சென்னை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்து கொண்டிருக்கிறது
பேப்பர் போடும் சிறுவனில் இருந்து மெரினா கடற்கரையில் உடம்பில் சர்க்கரையின் அளவை குறைக்க நடந்து கொண்டிருக்கும் பெரியவர்கள் வரை
அந்த நாளை துவக்கி கொண்டிருக்கிறார்கள்
6 மணி: நபர் ஒன்று
தலைக்கு மேல் காதுக்குள் இரையும் படி அலராம் அடித்தாலும் அதை அணைத்து விட்டு தூங்கும் அன்பர்களுக்கு மத்தியில் இவர் சற்று வித்யாசமானவர்
அலாரம் ஒலிக்கும் முன்னரே எழுந்து அதை அணைத்து விட்டு மீண்டும் உறங்கும் உயர்ந்த மனிதர்
இவர் துயில் எழும் முன்னர் இவரை பற்றி சில:
தனக்கென்று வாழ்வில் எந்த ஒரு லட்சியமும் இல்லாத 23 வயது வாலிபன்,
கடனே என்று பொறியியல் படித்து விட்டு எந்த பயனும் இல்லாமல்
பெற்றோரின் காசில் தன் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருக்கும்
மிக சாதாரண நபர்களில் இவனும் ஒருவன்
மிடில் கிளாஸ் வாழ்க்கை என கடைசி வரை தலையில் எழுதபடா விதி இருக்கும் சாதாரண பெற்றோர்கள் இவனை என்ன தான் செய்வார்கள் பாவம்
மனதிற்குள் மன்மதன் என்கிற நினைப்பு,
மனதிற்குள் மன்மதன் என்கிற நினைப்பு,
இவர் பெயரை சொல்ல மறந்து விட்டேனே இவர் தான் சுனில் என்கிற
சுனில் குமார்
6 மணி: நபர் இரண்டு
"காலையில் எழுவதில் 10 நிமிடம் கழித்து எழுவோம் என நினைக்கிறோமோ அப்போது தான் ஆரம்பிக்கிறது அன்றைய
தினத்தின் முதல் தோல்வி"
என்ற கொள்கையினை பின்பற்றுபவன்.
இவர் எழுந்து தனது காலை பணிகளை முடிக்கும் முன் இவரை பற்றி சில:
சந்துரு என்கிற சந்திர சேகர், பொறியியல் படிப்பை முடித்து விட்டு முடித்த கையொடு கல்லூரியே இவனுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தது
உயர்தர நடுத்தர வர்க்கம், வீட்டில் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தாலும்
மகன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்களில்
இவர்களுக்கும் இடம் உண்டு
ஒரு சின்ன கம்பனியில் வேலைக்கு சேர்ந்து 6 மாதம் தான் இருக்கும்
அங்கு தனக்கென்று ஒரு நல்ல பெயரை உருவாக்கி வைத்து கொண்டான்
ஒரு சின்ன கம்பனியில் வேலைக்கு சேர்ந்து 6 மாதம் தான் இருக்கும்
அங்கு தனக்கென்று ஒரு நல்ல பெயரை உருவாக்கி வைத்து கொண்டான்
"ச்சே" என்று சொல்கிற அளவுக்கு கேட்ட பழக்கவழக்கங்கள் இல்லை என்றாலும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு
சந்துரு என்றால் அப்படி அந்த பெயரில் என்ன தான் இருக்கிறதோ தெரியவில்லை பெண்கள் இவன் பெயரை சொல்லி அழைத்து இவனையே
சுற்றி சுற்றி வருவார்கள்
ஆனால் அவன் யாரையும் கண்டு கொள்வது கிடையாது,
அவனுக்கு பெண்கள் என்ற பெயரை கேட்டாலே வெறுப்பு தான் வரும்
அதனால் தான் என்னவோ இவனையே சுற்றி வந்தார்கள்
நம்மூர் பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்,
யார் அவர்கள் பின்னல் சுற்றுபவர்களை சீண்ட கூட மாட்டார்கள்,
அவர்களை கண்டு கொல்லாத பையனை நினைத்து உருகுவார்கள்
9 மணி : அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்
இந்த உலகத்தில் எதவுமே நடக்காதது போல் காதில் வயரை மாட்டிகொண்டு அவர்களை அழைத்து செல்லும் வாகனத்திற்காக காத்திருக்கும் சாப்ட்வேர் பெண்மணிகள்,
கவலை என்றால் என்ன வென்று கேட்கும் வயதில் முதுகில் பொதி தூக்கும் பள்ளி செல்லும் சிறுவர்கள்,
கடமையே கண் போன்றது என்று தான் வேலையில் கவனமாக இருக்கும்
அதாவது முன்னாடி நிற்கின்ற சிவப்பு சுடிதார் எங்கு வேலை பார்க்கிறாள்,
மஞ்சள் சுடிதார் என் இன்னும் வரவில்லை என்று தனது வேலையை பார்த்து
கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம்,
சென்னை வாழ்கையை நொந்து கொண்டு வேலைக்கு செல்லும் பெருசுகள் என அனைவருக்கும் இடம் கொடுக்கும் பேருந்து நிறுத்தம் அது,
சந்துரு செல்லும் D70 பேருந்து 9 30 மணிக்கு அந்த பேருந்து நிறுத்தத்தை வந்தடையும் அவன் வழக்கம் போல 9 15 மணிக்கு வந்தடைந்தான்
வழக்கம் போல் அன்றும் அனைவரும் தம் பணிகளை சிறப்பாக செய்து
வழக்கம் போல இன்றும் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது
பாவம் நடத்துனர் ஏன் டா?? இந்த வேலைக்கு வந்தோம் என்கிற ஏக்கம்
அவர் கண்களில் இருந்தது
சுற்றி சுற்றி வருவார்கள்
ஆனால் அவன் யாரையும் கண்டு கொள்வது கிடையாது,
அவனுக்கு பெண்கள் என்ற பெயரை கேட்டாலே வெறுப்பு தான் வரும்
அதனால் தான் என்னவோ இவனையே சுற்றி வந்தார்கள்
நம்மூர் பெண்களை பற்றி சொல்லவா வேண்டும்,
யார் அவர்கள் பின்னல் சுற்றுபவர்களை சீண்ட கூட மாட்டார்கள்,
அவர்களை கண்டு கொல்லாத பையனை நினைத்து உருகுவார்கள்
9 மணி : அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்
இந்த உலகத்தில் எதவுமே நடக்காதது போல் காதில் வயரை மாட்டிகொண்டு அவர்களை அழைத்து செல்லும் வாகனத்திற்காக காத்திருக்கும் சாப்ட்வேர் பெண்மணிகள்,
கவலை என்றால் என்ன வென்று கேட்கும் வயதில் முதுகில் பொதி தூக்கும் பள்ளி செல்லும் சிறுவர்கள்,
கடமையே கண் போன்றது என்று தான் வேலையில் கவனமாக இருக்கும்
அதாவது முன்னாடி நிற்கின்ற சிவப்பு சுடிதார் எங்கு வேலை பார்க்கிறாள்,
மஞ்சள் சுடிதார் என் இன்னும் வரவில்லை என்று தனது வேலையை பார்த்து
கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம்,
சென்னை வாழ்கையை நொந்து கொண்டு வேலைக்கு செல்லும் பெருசுகள் என அனைவருக்கும் இடம் கொடுக்கும் பேருந்து நிறுத்தம் அது,
சந்துரு செல்லும் D70 பேருந்து 9 30 மணிக்கு அந்த பேருந்து நிறுத்தத்தை வந்தடையும் அவன் வழக்கம் போல 9 15 மணிக்கு வந்தடைந்தான்
வழக்கம் போல் அன்றும் அனைவரும் தம் பணிகளை சிறப்பாக செய்து
கொண்டிருந்தனர்
சந்துருவின் அருகில் ஒரு 45 வயது மதிக்கதக்க ஒரு நபர் அவன் அருகில்
நின்று கொண்டிருந்தார்
அவர் ஏதோ பதட்டத்துடன் நிற்பது மட்டும் அவனுக்கு புரிந்தது,
அந்த நேரம் நான் வழக்கமாக செல்லும் பேருந்து வந்தது
வழக்கம் போல இன்றும் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது
பாவம் நடத்துனர் ஏன் டா?? இந்த வேலைக்கு வந்தோம் என்கிற ஏக்கம்
அவர் கண்களில் இருந்தது
நான் பேருந்தில் உள்ளே இடிச்சு புடிச்சு உள்ளே நுழைந்துவிட்டேன்,
அதே பேருந்தில் அவரும் அவசரமாக ஏற முற்பட்டார்
அதே பேருந்தில் அவரும் அவசரமாக ஏற முற்பட்டார்
அதற்குள் நடத்துனர் விசில் அடிக்கும் முன்பே ஓட்டுனர் பேருந்தை
இயக்க தொடங்கி விட்டார்
அதே நேரத்தில் ஒரு காலை மட்டும் படியில் வைத்து நிற்று கொண்டிருந்த
அவர் நிலை தடுமாறி தலை குப்பற கீழ விழுந்தார்
அவர் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது,
அந்த பெரியவர் அரை மயக்கதிற்கே சென்றார்
அவர் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்தது,
அந்த பெரியவர் அரை மயக்கதிற்கே சென்றார்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தில் இருந்த
அனைவரையும் பதறவைத்தது
நடத்துனர் சுதாரித்து கொண்டு விசில் அடிக்க வண்டி நின்றது
நடந்தது என்னவென்று புரியாமல் பேருந்தினுள் அகப்பட்ட புழுக்களை போல
உள்ளே நின்று கொண்டிருந்த அனைவரின் கவனமும் ஒரு சேர அந்த
இடத்தை ஆக்கிரமித்தது
படியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள்,
அவசரமாக இறங்கினார்கள் நானும் செய்வதறியாது அவர் அருகில்
சென்றேன்
இந்த பதட்டமான சூழ்நிலையில் பேருந்தில் உள்ள அனைவரும்
ஓட்டுனரை பல்வேறு மொழிகளில் திட்டி தீர்த்து கொண்டிருந்தனர்
அதற்குள் அந்த இடத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஓடி வர
அந்த இடமே ஏதோ விபரிதம் நடந்து விட்டது என அனைவரும்
அறியும் வகையில் இருந்தது
அந்த அதிகாரி தனது அழைபேசி எடுத்து தொடர்பு கொண்டு,
அம்புலன்சை அனுப்பி வைக்கும்மாறு உத்தரவிட்டார்
அதற்குள் அருகமையில் இருத்த தீஅணைப்பு நிலையத்தில் இருந்த
முதலுதவி பெட்டியின் மூலம் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது
இருப்பினும் அவர் தலையில் இருந்து வழிகின்ற ரத்தம் நின்றபாடில்லை
அடுத்த 5 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அந்த இடத்தை வந்தடைந்தது
அவர்கள் அவரை அதில் ஏற்றி விட்டு கொண்டு சென்றனர்
அந்த காவல் அதிகாரி அந்த பேருந்தை ஓரம்கட்டி, அந்த நடத்துனர்
மற்றும் ஓட்டுனரை போலீஸ் அதிகாரி விசாரிக்க தொடங்கினர்
அதற்குள் வேறு பேருந்து வந்துவிடவே நான் அதில் ஏறி கொண்டேன்
என்னை போல சிலரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கி வேறு பேருந்தில்
ஏறி கொண்டனர்
நான் வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்று எனது
அன்றாட அலுவல்களை செய்ய துவங்கினேன், ஏனோ மனம்
அதில் லயிக்கவில்லை
இந்த சம்பவம் இனி எவனை என்ன செய்யபோகின்றது என்று
பொறுத்திருந்து பாப்போம்
தேடல் தொடரும்...
அவர்கள் அவரை அதில் ஏற்றி விட்டு கொண்டு சென்றனர்
அந்த காவல் அதிகாரி அந்த பேருந்தை ஓரம்கட்டி, அந்த நடத்துனர்
மற்றும் ஓட்டுனரை போலீஸ் அதிகாரி விசாரிக்க தொடங்கினர்
அதற்குள் வேறு பேருந்து வந்துவிடவே நான் அதில் ஏறி கொண்டேன்
என்னை போல சிலரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கி வேறு பேருந்தில்
ஏறி கொண்டனர்
நான் வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்று எனது
அன்றாட அலுவல்களை செய்ய துவங்கினேன், ஏனோ மனம்
அதில் லயிக்கவில்லை
இந்த சம்பவம் இனி எவனை என்ன செய்யபோகின்றது என்று
பொறுத்திருந்து பாப்போம்
தேடல் தொடரும்...
Subscribe to:
Posts (Atom)