Thursday, February 9, 2012

முதல் வரி! முதல் பிழை!! -2

பாகம் 1 -http://kangalumkavipaduthe.blogspot.in/2011/10/blog-post.html

அவளை தேடி அலைந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரி மணி
ஒழித்தது

இதற்கு மேல் அவளை தேடி கொண்டிருப்பதில் எந்த விதமான உபயோகமும்
இல்லை என்பதனை உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தேன்

அந்த பெண்ணை இப்படி தவற விட்டுவிட்டோமே, என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நின்றது இருப்பினும் நம் கல்லூரியில் தானே படிக்கிறாள்
அப்புறமாக பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்

அவளை சந்தித்ததின் ராசியோ என்னமோ தெரியவில்லை, எப்போதுமே
வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் வரும் சறுக்கு மரம் அன்று ஏனோ
வரவில்லை

எல்லாம் அந்த பெண்ணை சந்தித்ததின் மகிமை என நினைத்து கொண்டேன்


பள்ளி முடிந்த நண்பர்களோடு வீடு வந்து சேர்ந்தேன், எப்போதும் நான்
சுதாவுடன் வருவது தான் வழக்கம் அன்று வேறு வழி இல்லாததால்
அவர்களோடு வந்தேன்


வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சுதாவை சந்திக்க சென்றேன்,
அங்கு அவள் அம்மாவிடம் அவள் எங்கே என்று வினவ இன்று கல்லூரி
செல்லாத காரணத்தால் இன்றைய பாடங்களை தெரிந்து கொள்வதற்காக
அவள் தோழி வீட்டிற்கு இப்போது தான் சென்று உள்ளதாக கூறினார்கள்

நானும் அப்புறமாய் சந்தித்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, என் நண்பர்களோடு வெளியில் சென்று விட்டேன்

நாங்கள் அனைவரும் கல்லூரி முடிந்ததும், நாங்கள் வழக்கமாக
சந்திக்கும் இடமான பொட்டிக்கடையில் ஆஜரகிவிட்டோம்

அந்த கடை எங்கள் வீட்டில் இருந்து தொலைவில் உள்ள கடை தான்,
அந்த கடையை நாங்கள் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் அந்த பகுதியில்
என் தந்தை அடிக்கடி வரமாட்டார், நிம்மதியாக சிகரட் பிடிக்கலாம்
என்று தான்

சிகரட்டை வாயில் பற்றவைத்து எமனை உள்ளே இழுத்து, வெளியே விட்டு கொண்டிருந்தேன்

அந்த நேரம் என் நண்பன் அருகில் இருந்து சைகை தர என் தந்தை தான் வந்து
விட்டாரோ என பதறி அடித்து சிகரட்டை காலில் போட்டு மிதித்து
வாயில் உள்ள புகையை அந்த பக்கம் திரும்பி ஊதி விட்டு திரும்பினேன்

அந்த பக்கம் திரும்பி பார்த்தாள் சுதா வந்து கொண்டிருந்தாள்,
இவளுக்காகவா இதை கீழே போட்டோம் அவளுக்கு தான் நான் புகை
பிடிப்பேன் என்று நன்கு தெரியுமே!!

அவள் அருகில் யாரோ வருவது போல தெரிந்தது, ஒரு வேளை அவள் தங்கையாக இருக்குமோ என எண்ணி அவளுடன் வருவது யார் என்று உற்று நோக்கினேன்,

அப்போது தான் தெரிந்தது என்னை இடித்து விட்டு என்னை கடந்து சென்ற அந்த தேவதையே தான் இவள் எப்படி சுதாவுடன் வருகிறாள் என்று எண்ணி கொண்டேன்


ஒரு வேளை சுதாவின் தோழியாக இருப்பாளோ?
இல்லையே சுதாவின் தோழிகள் அனைவரையும் நான் நன்கு அறிவேன்
இருப்பினும் இவளுக்கும், சுதாவிற்கும் என்ன சம்மந்தம் இருக்க போகிறது
என்று யோசித்து கொண்டிருந்தேன்

இந்த நேரத்தில் அவர்கள் நாங்கள் நின்ற இடத்தினை விட்டு கடந்து
சென்றார்கள்

என் நண்பர்களிடம் நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு
உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்

சீக்கிரம் போ, இல்லைனா சுதா உங்கள் வீட்டுல சிகரட் விஷயத்தை போட்டு
கொடுத்திடபோற என என் நண்பர்கள் பேசுவது என் காதுகளில் நன்கு விழுந்தது

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த இடத்தை விட்டு மாயமாய் மறைந்தேன்

வந்ததும் என் வீட்டிற்கு கூட செல்லாமல், சுதா வீட்டினை நோக்கி
நகர்ந்தேன்

அவள் ஏதோ கணினியில் நொண்டி கொண்டிருந்தாள்,

" வாடா, இன்னைக்கு என்ன கிளாஸ்-க்கு வெளில நிக்க வச்சுட்டார
சறுக்கு மரம்?"

" இல்லை இன்னைக்கு, அவர் வரல தப்பிச்சுட்டேன், அத விடு
அப்போ உன் கூட வந்தால ஒருத்தி யார் அவ"

" நீ யார கேக்குற"

" சாயந்திரம் நான் போட்டி கடையில சிகரட் அடிக்கும் போது, உன் கூட
வந்தால அவ யாரு"

" நீ ஸ்வேதாவ, கேக்குறியா'

" அது யாருன்னு தெரியாம தான் உன் கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்
பின்னே எனக்கு எப்படி எப்படி தெரியும் அவ ஸ்வேதாவ, மாலாவன்னு?"


" சரி, இப்போ நீ எதுக்கு அவளை பத்தி விசாரிக்குற"


" அவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?"


"முன்னாடியே தெரிஞ்சிருந்த நான் ஏன் உன் கிட்ட வந்து கேட்க போறேன்,
அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு தான் உன் கிட்ட வந்து கேக்குறேன்"


" அவளை பத்தி நீ எதுக்கு தெரிஞ்சுக்கணும் என்னப்பா, அவளை லவ் பன்றியா?"

" அப்படி எல்லாம் இல்லை"

" சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான், மத்த படி நீ நெனைக்கிற மாதிரி எதுவும்
இல்லை"

என்று அவன் உதடுகள் தான் கூறியதே தவிர, அவன் சொல்வது பொய் பொய் என்பதனை உணர்திக்கொண்டிருந்தது அவனது கண்கள் இதை சுதா
கவனிக்க தவறவில்லை

அவளை பற்றி தனக்கு தெரிந்த எல்லா தகவல்களையும்,
அவனிடம் அவள் கூறினாள் அதன் பின்னர் தான் தெரிந்தது அவள்
தன்னுடைய கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்று

அவள் இது நாள் வரை நடந்த பாடங்களை, சுதாவிடம் கேட்டு தெரிந்து
கொள்வதற்காக அவள் தனது வீட்டிற்கு வரும் படி அழைத்து கொண்டதால்
தான் சென்றதாகவும் சுதா தெரிவித்தாள்

அவளிடம் எப்படி அறிமுகமாவது என யோசித்து கொண்டிருந்தேன்,
சுதாவிடமே கேட்டு விடலாமா என யோசித்தேன், என்னால் அவர்கள் நட்பு
பாலகி விட கூடாது என எண்ணி அவளிடம் கேட்க எனக்கு மனம் வரவில்லை

சரி, எனது நண்பர்கள் யாரிடவது கேட்கலாம் என்றால்
நீயும் அந்த நோய்ல மாடிகிட்டாய?
என என்னை கலாய்ப்பார்கள் என்று அவர்களிடம் கேட்காமல் விட்டுவிட்டேன்

நாளை காலை அவளை சந்திக்க போகிறோம் என்ற எண்ணமே அந்த இரவை நித்திரை இல்லாமல் நீண்ட இரவாக விடிய செய்தது

காதல் ஒரு பைத்தியகாரத்தனம் என்று எண்ணி கொண்டிருந்தேன்,
என்னை அவளது மின்னல் கண்கள் தாக்கும் வரையில்

வழக்கத்தை விட அதிக நேரம் குளித்து, அழகாக நல்ல உடையினை
உடுத்திக்கொண்டு கல்லூரிக்கு சீக்கிரமே கிளம்பினேன்

ஒருவேளை அவள் எனக்கு முன்னதாகவே வந்து விட்டால், என்ற எண்ணம் தான் நான் சீக்கிரமே கிளம்பவைத்தது

அப்போது நான் வெளியில் வரவும் சுதா வீட்டில் இருந்து தனது தந்தையுடன் கிளம்பி கொண்டிருந்தாள்

அவர் தந்தைக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு சிட்டாக கிளம்பி கல்லூரிக்கு பறந்தேன்

காலை 8 .30 கல்லூரி எப்படி இருக்கும் என்று, அன்று தான் முதல் முறையாக
கண்டேன்

எப்போதும் சல சல வென இருக்கும் மெயின் பிளாக் அமைதியாக இருந்தது,
அங்கே சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்

அப்போது அந்த பக்கம் இருந்த அறிவிப்பு பலகையை உற்று நோக்கினேன், கல்லூரியை பற்றி சில அறிவிப்புகள் இருந்தது

அவள் வரும் வரை இதையாவது படிக்கலாம் என்று ஒவ்வொன்றாக
படித்து கொண்டிருந்தேன்

கல்லூரி நிர்வாகம் சார்பாக ஒரு அறிவிப்பு இருந்தது....


தேடல் தொடரும்...

No comments:

Post a Comment