Wednesday, February 15, 2012

சிரிப்பதா, அழுவதா??



சிரிப்பதா, அழுவதா??


என்னை அவள் வெறுக்கிறாள்
என்று தெரிந்து கொண்டேன் 
நான் கொடுத்த காதல் கடிதங்களை
என் முகத்தில் அவள் தூக்கி
எறிந்தபோது??


பள்ளியில் என்னை ஆசிரியர் 
மற்றவர்கள் முன்னிலையில் 
வீட்டு பாடங்களை கேட்டது 
அவமானம் என்று கருதி அதன் பின்பு 
பள்ளிக்கு செல்லாத நான் 


இன்று இதனை பேர் முன்னிலையில் 
என்னை வேண்டாம், 
என்னை தொந்தரவு செய்யாதே 
என கூறியும் அவள் பின்னால்
நாய் போல திரியும் இந்த மனதை
நான் என்ன வென்று சொல்வேன் 


கைபேசியில் குறுஞ்செய்தி சத்தம்
கேட்டவுடன் அவள் ஏதும் செய்தி 
அனுப்பி இருப்பாளோ?
என்று என்னை நானே ஏமாற்றி
கொள்ளும் இந்த காதலை என்னவென்று 
சொல்வேன்


இறுதியாக நான் காத்திருந்த அந்த 
நாளும் வந்தது என்னவளிடம் 
அழைப்பு வந்தது 


மனம் எண்ணில் அடங்க கற்பனைகளோடு 
அவளிடம் பேசினேன் அப்போது 
அவள் தான் தெரிந்தது என் மீது 
பாசத்தோடு அவள் என்னை அழைக்கவில்லை 


அவளின் திருமண தேதியை என்னிடம்
தெரிவிக்க என்று 


சிரிப்பதா, அழுவதா???

No comments:

Post a Comment