கடை தெருவிற்கு சென்று காய்கறிகளை
வாங்க சென்றேன்
மீதி சில்லறை 5 ரூபாய்க்கு பதிலாக
சிறிய இனிப்பு பொட்டலத்தை கொடுத்தான்
அந்த கடைக்காரன்
அதை வாங்கி கொள்ள மனம்
வராததால் மீதி சில்லரையினை கேட்டு
சண்டை போட்டேன்
போகட்டும் 5 ரூபாய் தானே
என்றது மனது , ஆனால் மறுபுறமோ
கேளு இது உனது உரிமை என்றது
ஒரு வழியாக மீதி சரியான சில்லறையை
வாங்கிகொண்டு நடந்தேன்,
வரும் வழியில் ஒரு பிச்சைகாரன் கையை
நீட்டி உதவி கேட்டுகொண்டிருந்தார்
முகத்தை பார்க்கவும் மிகுந்த வறுமையும், பசியும்
இருப்பது கண்களில் தெரிந்தது
பாக்கெட்டினுள் கையை நுழைத்தேன்
5 ரூபாய் வந்தது, ஹ்ம்ம் கடைக்காரனிடம்
சண்டை போட்டு வாங்கிய அதே 5 ரூபாய் தான்
அந்த ரூபாயினை கொடுத்து விட்டு சிறிது தூரம்
நடந்து சென்று பின்னல் திரும்பி பார்த்தேன்
அந்த பிச்சைக்காரர் அருகினில் இருந்த
தேனீர் விடுதியினில் ஒரு தேனீரினை
பருகி கொண்டிருந்தார்
ஏதோ என்னால் முடிந்த அளவு அவரின் பசியினை
தீர்க்க முடியாவிட்டாலும், யானை பசிக்கு
சோளைபோரியை...
nice da 3rd para manam apdingara word two tyms type aagi irruku!!!
ReplyDelete